பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை – மனுஷ

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈ 8 விசா குழுவின் கீழ் பருவகால தொழில் வாய்ப்புக்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்காக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் […]

Continue Reading

முன்னாள் காதலனின் ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயினை தவறாக குப்பையில் வீசிய பெண்

இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவரது முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி) ஆகும். ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இதற்கிடையே வீடுகளை சுத்தப்படுத்தும்போது, அந்த பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை அவரது முன்னாள் காதலி ஹல்பினா […]

Continue Reading

எலான் மஸ்க் போட்ட ஒரே டுவீட்: USA அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் 2025 ஜனவரி மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். அண்மையில், காலநிலை தொடர்பாக பணிபுரியும் 4 அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்கிற ஸ்க்ரீன்ஷாட்டை எலான் மஸ்க் தனது […]

Continue Reading

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:28 அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு […]

Continue Reading

போலீஸ் வாகனம் மோதி, விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் (லிமோசின்) பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது. பாராளுமன்றம் அமைந்துள்ள நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நேற்று பிற்பகல் சிறிய விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்நாட்டு விவகாரத் துறை, உத்தியோகபூர்வ வாகனங்களை நிர்வகிக்கும் நிறுவனம், சொகுசு கார் பின்புறம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், […]

Continue Reading

இந்து மத துறவி கைது: அமெரிக்க பாடகி கண்டனம்

வாஷிங்டன்:28 வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் […]

Continue Reading

சீரற்ற வானிலை: அம்பாறையில் அதிக உயிரிழப்பு பதிவு!

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு […]

Continue Reading

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள்! 

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), பெலரூஸ் குடியரசு (The Republic of Belarus), ஆர்மேனியா குடியரசு (The Republic of Armenia), ஸ்பானிய குடியரசு (The […]

Continue Reading

42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.  அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் […]

Continue Reading

அம்பாறை உழவு இயந்திர விபத்து: அதிபர் மற்றும் 4 பேர் கைது

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பஸ் இல்லாததால், தலைமையாசிரியர் குறித்த உழவு இயந்திரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு அதற்காக பணமும் பணமும் வழங்கியுள்ளமை […]

Continue Reading

மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 2723 பாதுகாப்பு படையினர்

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2723 பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை 105 இராணுவ படகுகளும், 107 கடற்படை படகுகளும், 20 விமானப்படை படகுகளும் மற்றும் 7 பொலிஸ் படகுகளும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 80 இராணுவ குழுக்கள் மற்றும் 130 கடற்படை குழுக்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை விமானப்படையின் 6 உலங்கு வானூர்திகளும், இராணுவத்தின் […]

Continue Reading

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மனைவி ஆவார்.  குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  உயிரிழந்த மனைவி கடந்த திங்கட்கிழமை (25) மீகஹகிவுல நகரத்தில் தனது அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியில் இருந்த கணவன் […]

Continue Reading