துபாயில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் கைது

துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான பெண் துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அம்பாறை, பதுளை மற்றும் பிபில உள்ள […]

Continue Reading

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கியது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 20.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட முதல் நாள் ஆட்டம் மதிய நேர […]

Continue Reading

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ – கனேவல்பொல வீதியில் கோமரன்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து நேற்று புதன்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது கலென்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ, கோமரன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த […]

Continue Reading

07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் […]

Continue Reading

நாட்டில் சீரற்ற வானிலையால் 13 பேர் பலி: 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 77 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த […]

Continue Reading

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் முதல் வழக்கு: சந்தேக நபருக்கு 6 மாத சிறை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே சந்தேகநபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத […]

Continue Reading

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு! 

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது.  கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார்.  இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். எனினும் மூன்று நாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கபபடவில்லை. இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அந்த குளத்தில் இருந்து […]

Continue Reading

ஆழ்ந்த தாழமுக்கம் நாளை முதல் குறைவடையும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ […]

Continue Reading

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்

சொலிசிட்டர் ஜெனரலாக ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்புமேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனவரி 2020 முதல் ஜனவரி 2023 வரை, அவர் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி உரிய உதவிகளை வழங்கவில்லை – கீதநாத்

இலங்கையின் வடமாகாணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அந்த மாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதியளவு உதவிகளை வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் யாழ்மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி வழங்க தவறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுமார் 250,000க்கும் அதிகமான மக்கள் கடும் வெள்ளத்தினால் பாதிப்புகளை […]

Continue Reading

அவசரமாகக் கூடியது வவுனியா ஒருங்கிணைப்புக் குழு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (28) காலை, வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டனர். சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் […]

Continue Reading

07 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவிட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் திகதி, கொழும்பு மட்டக்குளிக்கு அருகிலுள்ள கடற்கரையில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டுசெல்லும் போது பொலிஸ் […]

Continue Reading