மட்டக்களப்பில் வெள்ளத்தால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமையும் (28) மழை சற்ற ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையிலும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் தழம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. மண்டூர் – குருமண்வெளி படகுப்பாதை, அம்பிளாந்துறை குருக்கள்மடம் படகுப்பாதைப் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, வவுணதீவு மட்டக்களப்பு நகர் பிரதான வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்துவருவதானல் அவ்வீதிகளுடனான […]

Continue Reading

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளது. மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்ற போது கால் தவறி குளத்திற்குள் இளைஞன் விழுந்துள்ளார். இதனையடுத்து, ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் […]

Continue Reading

மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவை!

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading

அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி […]

Continue Reading

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் உங்கள் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது. டிசம்பர் 15, 2024க்குப் பிறகு, தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது, மேலும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் […]

Continue Reading

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – 7 பேரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு – மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போனவர்களில் இதுவரையில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சம்பவத்தின்போது, அதில் 14 பேர் பயணித்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காரைதீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காணாமல் போயிருந்தவர்களில் ஐவர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதுடன், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 சிறுவர்களின் […]

Continue Reading

37 குளங்களின் வான்கதவுகள் திறப்பு!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தெதுறு ஓயா, நில்வளா கங்கை, களனி கங்கை, மகாவலி கங்கை, யான் ஓயா, மல்வத்து ஓயா, மகா ஓயா, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் […]

Continue Reading

வெள்ளத்தினால் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 2, 000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3, 900 ஏக்கருக்கும் அதிக விவசாய நிலப்பரப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. குறித்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டால், சுமார் 3, […]

Continue Reading

புதிய பாராளுமன்றத்தில் இலங்கை – சீன நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க ஆராய்வு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் (Zhao Leji) வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கௌரவ கலாநிதி அசோக ரன்வலவிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால […]

Continue Reading

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பல வீதிகள்!

நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து வெள்ளப்பெருக்கு காரணமாக ஊரணி பகுதியில் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு – வவுணதீவு வீதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வடமுனை – ஊத்துச்சேனை வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதுடன் அங்குப் படகு மூலமான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, பண்டாரவளையிலிருந்து பசறை செல்லும் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பசறை […]

Continue Reading

இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழகம் நோக்கி நகரும் தாழமுக்கம்

நாட்டில் தொடர்ந்தம் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது . இந்நிலையில், தாழமுக்கம் வடக்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இலங்கையின் கரையோர பிரதேசத்தின் வழியாக தமிழ்நாடு நோக்கி மிக மிக மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று மாலை ஒரு சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 160km தூரத்திலும், திருகோணமலையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 110km தூரத்திலும், முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 135km தூரத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து (பருத்தித்துறை) தென்கிழக்காக 210km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.

Continue Reading