தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன, ரஷிய ராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின. முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் […]

Continue Reading

வான்கோழி கறி விருந்து.. விண்வெளியில் Thanks Giving கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தாங்க்ஸ் கிவ்விங் […]

Continue Reading

சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி […]

Continue Reading

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும் அரசிடம் கையளிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதன்படி, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் […]

Continue Reading

கல்குடா பொலிஸ் பிரிவில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்

கல்குடா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை (29) இரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இவ் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகள், ஜன்னல் பகுதிகளை உடைத்து பெறுமதிவாய்ந்த வீட்டு உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக மட்டக்களப்பு குற்ற தடயவியல் பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோப்ப சக்தி நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர். திருடர்களிடமிருந்து தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு பிரதேச […]

Continue Reading

நாரஹேன்பிட்டி கொலைச் சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை! 

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2016இல் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, மற்றுமொருவர் காயமடைந்தார்.  இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும், நீண்ட கால விசாரணைகளின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் இந்த மரண தண்டனையை […]

Continue Reading

இங்கிரியவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் , சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் எதுரகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 33 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் , மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு […]

Continue Reading

தலைமன்னாரில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கேசாலே, சிரிதோப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24, 28, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 06 கிலோ 120 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கொக்கரெல்லையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

குருணாகல், கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ பிரதேசத்தில், சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருநாகல் முகாமின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் , இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 58 வயதுடையவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் இருந்து , 400 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை , கைதுசெய்யப்பட்ட […]

Continue Reading

கரையை கடக்கும் புயல்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் […]

Continue Reading

யாழில் முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள்.  மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் […]

Continue Reading