சீரற்ற வானிலையால் இதுவரை 14 பேர் பலி-இருவர் மாயம்-4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 232 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பதுளை, அம்பாறை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் அனர்த்தத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 289 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 42 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற […]

Continue Reading

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மீட்பதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். அதேபோல், சேதமடைந்த அனைத்து நீர்ப்பாசன வசதிகளையும் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் […]

Continue Reading

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் […]

Continue Reading

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாகவே இருண்ட காலநிலை நிலவுவதாக ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் அஜித் குணவர்தன தெரிவித்தார். இந் நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருப்பதாகவும் ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால், நாட்டின் பல பகுதிகளில் […]

Continue Reading

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மறை 0.8 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மறை 2.1 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உணவுப் பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 […]

Continue Reading

வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என அதன் தலைவர் இந்தியா சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று அவர் […]

Continue Reading

ஊழல், மோசடிகளை பயமின்றி நேரடியாக எங்களிடம் முறையிடுங்கள் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்

நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் குறித்து பயமின்றி நேரடியாக தங்களிடம் முறையிடுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டடுத்தொகுதி அதிகார சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வியாழனன்று சென்றிருந்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சருடன் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன, பிரதி இளைஞர் விவகார அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் சுனில் குமார கமகே, ‘அரசியல், கட்சி வேறுபாடு, […]

Continue Reading

உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும் என அறிவித்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்குரிய பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Continue Reading

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், […]

Continue Reading

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப் பகுதியின் வெலி ஆர பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று ஒலி எழுந்துள்ளது. அதனைகேட்ட கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமி வருகின்றதோ என அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அது வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அதனாலேயே ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் தேவையில்லை எனவும், ஏதாவது […]

Continue Reading

சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை – NPP எம்பி லக்மாலி ஹேமச்சந்திர

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி குறிப்பிட்ட உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். எம்.பி.க்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருப்பதாகவும், அவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும், […]

Continue Reading