திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு! பிரதி அமைச்சர் டி.பி.சரத்

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். சிறந்த திருமணம் வயது 24-30 வயது, அதற்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்றும், அந்த வயது இடைவெளிக்குள் திருமணம் நடக்கும் போது, ​​அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது அரசின் பொறுப்பாகக் கருதப்படும் என்றும் பிரதியமைச்சர் கூறுகிறார். […]

Continue Reading

இலங்கை சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிறந்த பலன்கள் – சீனத் தூதுவர்!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முக்கியமான இரண்டு தேர்தல்களின் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் சீனாவின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Continue Reading

இலங்கையின் சுகாதார, பொருளாதார முயற்சிகளை வரவேற்கும் ஜப்பானியத் தூதுவர்!

வீண் விரயம் மற்றும் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த சுகாதார சேவையை உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாடா (Akio Isomata) இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுகாதார சேவையில் ஜப்பானின் ஆதரவின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் […]

Continue Reading

சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு விடுத்த அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று (29) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ. எச். எம். டி. […]

Continue Reading

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 மணி வரையிலான புதுப்பிப்பின் படி, மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,071 குடும்பங்களைச் சேர்ந்த 441,373 பேர் பாதிக்கப்பட்டனர். 19 பேர் காயமடைந்தும், ஒருவர் காணாமலும் போயுள்ளனர். மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி 99 வீடுகளும், 2,082 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. […]

Continue Reading

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருக்க வேண்டும் என்றும்ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார் அத்துடன் பாதகமான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் எல்லைகளுக்கு இடையேயான […]

Continue Reading

பொரளையில் கொக்கெய்னுடன் ஒருவர் கைது

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து , 5 கிராம் 255 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Continue Reading

முந்தலில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியின் நவதன்குளம் பகுதியில் , கேரள கஞ்சா மற்றும் காருடன் இருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 38, 42 வயதுடைய மங்களஎலிய மற்றும் மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிலோ 83 கிராம் கேரள கஞ்சா மற்றும் […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்கள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு , இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நாள்தோறும் சுகாதார சேவைகள், யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்படும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து, யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மற்றும் யாழ் ஒஸ்மானிய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னுரிமையுடன் […]

Continue Reading

அம்பாறை மாவட்டத்தில் 916 பேர் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்ததால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்படைந்துள்ளனர் அத்துடன் குளாரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க […]

Continue Reading

நாரஹேன்பிட்டி பகுதியில் கொலை சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை!

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து, ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே […]

Continue Reading

எதிமலையில் கஞ்சா செடிகள், உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

வத்தேகம, எல்லனகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொவிபல மற்றும் விலஒய பிரதேசத்தைச் சேர்ந்த 47, 68 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களிடமிருந்து 301 கஞ்சா செடிகள் மற்றும் 2 உள்நாட்டுத் துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Continue Reading