பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் கைது!

வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது […]

Continue Reading

இலங்கையை பயன்படுத்தும் சீனா: தமிழர்களே பகடைக்காய்! – தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கை பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நோக்கத்தை அடைய ஈழத் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த சீனா நினைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று பெற்றுத் தரவேண்டும் என்ற எண்ணம் சீனாவிற்கு ஒருபோதும் கிடையாது. ஈழத் தமிழர்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக இருந்தால் அது இந்தியா ஒன்றினாலேயே முடியும் என்றும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்திய […]

Continue Reading

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது. வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுரிமைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Continue Reading

நீண்ட நேர நீர்வெட்டு! கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று (15) இரவு 10.00 மணி முதல் நாளை (16) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும். கொழும்பில் […]

Continue Reading

யாழில் ஓரணியில் இணைந்த முக்கிய புள்ளிகள்!

‘சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே’ எனும் தொனிப்பொருளில் நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு.ஜெயசூரியாவின் தலைமையில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தற்போது விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், […]

Continue Reading

துருக்கியில் நிலக்கரி சுரங்க வெடிப்பு – 28 பேர் பலி!

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நிலத்தடியில் சிக்கியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பின் போது சுமார் 110 பேர் சுரங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பாதி பேர் 300 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்தனர். வெடிப்பின் பின்னர், 11 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அவசரகாலக் குழுக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். காணாமல் […]

Continue Reading

வரக்காபொலயில் தாய் மற்றும் மகனின் உடலங்கள் கண்டுபிடிப்பு

கொழும்பு,ஒக்.15 அசாதாரண காலநிலை காரணமாக வரக்காபொல – கும்பலியத்த பிரதேசத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் மீது நேற்று மாலை மண் மேடு ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் அதில் சிக்குண்டிருந்த பெண்ணின் உடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேகாலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணின் மூத்த மகன் மண் சரிவுக்கு அடியில் சிக்கியுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இன்னும் […]

Continue Reading

விசா மோசடி: அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு,ஒக்.15அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடமபெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது. மேலும் டி.வி.லொட்டரி மோசடிகளும் […]

Continue Reading

பொருளாதார சீர்திருத்தம் குறித்து இலங்கை – IMF பேச்சு!

கொழும்பு,ஒக்.15 நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை வொஷிங்டனில் சந்தித்துள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது. வொஷிங்டனில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போது உலக […]

Continue Reading

தங்க கடத்தல்காரர்களால் இலங்கைக்கு பாரிய நட்டம்!

கொழும்பு,ஒக்.15 தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களினால் இலங்கைக்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது. குறிப்பாக இவர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 30 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த கடத்தல்காரர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியா, பாகிஸ்தான்- பங்களாதேஷ் அணிகளில் மாற்றம்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்காக சர்வதேச அணிகள் தயாராகி வரும் நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் இந்தியா அணியில் உபாதைக் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பதிலாக, மொஹமட் ஷமி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேபோல பாகிஸ்தான் அணியில், காயத்தில் இருந்து போதுமான அளவு மீளத் தவறிய உஸ்மான் காதிருக்குப் பதிலாக காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஃபகஹர் ஸமானை 15 […]

Continue Reading

முல்லையில் இரு உயிர்களை காவுகொண்ட தொடருந்து

தொடருந்துடன் மோதுண்டு இரு யானைகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளது. தொடருந்து சுமார் 1 மணி நேரத்தின் பின்னர் சேவைக்கு திரும்பியுள்ளது. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரும், வனஜீவராசிகள் திணைக்களமும் தனித்தனியான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Continue Reading