மிளகாய் தூள் வீசி பணம் கொள்ளை

கொழும்பு,ஒக் 14 கசினோ நிலையத்தில் மிளகாய் துாளை வீசி ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர். குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி, சாகர வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கசினோ நிலையத்திலிருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை, அருகே உள்ள அந்த நிலையத்தின் அலுவலகம் ஒன்றுக்கு பெண் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் எடுத்துச் சென்றுள்ளார். பணம் அடங்கிய பெட்டி பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைகளிலேயே இருந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் […]

Continue Reading

தென்கொரியா எல்லை அருகே போர் விமானங்கள் பறந்து சென்றதால் பதற்றம்

சியோல்,ஒக் 14 வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது. கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா, குறுகிய தூர ஏவுகணையை சோதனை நடத்தியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்தது. மேலும் தென் கொரியா எல்லை அருகே வடகொரியாவின் போர் விமானங்கள் […]

Continue Reading

வார இறுதி நாட்களில் மின்வெட்டு கால எல்லை குறைப்பு

கொழும்பு,ஓக் 14 நாட்டில் 15, 16, 17 ஆம் திகதிகளுக்கான மின்வெட்டு பட்டியலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி 15 & 16 ஆம் திகதிகள் – A, B, C, D, E, […]

Continue Reading

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

திருகோணமலை,ஒக் 14 திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல, எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட “சுர்பானா ஜூரோங்” மாஸ்டர் பிளான் பற்றி விளக்கமளிக்கும் மாநாடு இன்று இடம்பெற்ற நிலையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Continue Reading

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் கனேடிய விபத்தில் பலி

யாழ்ப்பாணம்,ஒக் 14 யாழ்ப்பாணம் சுதுமலை கிராமத்தைச் சேர்ந்த இளையவர்களான சகோதரர்கள் பாரி, நிலா ஆகியோர் கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Continue Reading

தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள தகவல்

கொழும்பு,ஒக் 14 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(14) பொதுமக்களைக் கோரியுள்ளது. மின்னணு பதிவேட்டில் இல்லாதவர்கள் அக்டோபர் 19ம் திகதிக்குள் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்க வேண்டும் என்று ஆணைக்குழு கேட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் பெயர்கள் உள்ளதா என்பதை அந்தந்த கிராம அலுவரிடம் சரிபார்க்கலாம். அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.elections.gov.lk […]

Continue Reading

எகிப்துக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

கொழும்பு, ஒக்.14 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில் மூன்றாம் சார்லஸ் மன்னர் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார். COP 27 மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மூன்றாம் சார்லஸ் மன்னர் தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். […]

Continue Reading

மண்மேடு சரிந்து வீழ்ந்து விபத்து; ஒருவர் மீட்பு – மூவர் மாயம்!

வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் மண்மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் நால்வர் சிக்குண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்குண்ட நால்வரில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மண் சரிவில் சிக்குண்ட ஏனைய மூவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல் சப்ரகமுவ, மாத்தறை […]

Continue Reading

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கலந்துரையாடலின் போது ஊடகவியவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்வதாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

Continue Reading

தோட்டக்காணி தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்று பாரண்டா தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு (ஜனவசம) உரித்தான காணியே இவ்வாறு தனி நபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பல தசாப்தங்களாக வாழும் மக்களின் இருப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இ.தொ.காவின் உப […]

Continue Reading

யாழில் கோர விபத்து; இளைஞன் ஸ்தலத்தில் பலி! – சாரதி தப்பியோட்டம்

யாழ்ப்பாணம்,ஒக் 14 யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாவாந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய சக்திதாசன் டான்சன் என்ற இளைஞரே உயிரிழந்தார். பட்டா ரக வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடிய நிலையில், விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி; 40 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க கம்பனி இணக்கம்!

பதுளை – நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட கனவரல்ல ஈ ஜி கே பிரிவில், மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொழில் அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு இடையே இந்தக் […]

Continue Reading