மூலப்பொருள் பற்றாக்குறை: சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு

கொழும்பு,செப் 13 கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கான கேட்டரிங் சேவைகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

மருந்து தட்டுப்பாட்டுக்கு சுகாதார அமைப்பே பொறுப்பேற்ற வேண்டும்: GMOA

கொழும்பு,செப் 13 நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு மருத்துவமனை சுகாதார அமைப்பு, சுகாதார அமைச்சு, மத்திய மருத்துவ நிறுவகம் ,அரச மருத்துவக் கழகம் (SPC), அரச மருந்து உற்பத்திக் கழகம் (SPMC), தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லை எனவும், அவற்றின் வினைத்திறன் இன்மையே நாட்டில் மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என GMOA ஊடகப் பேச்சாளர் சமில் […]

Continue Reading

மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள்

கொழும்பு,செப் 13 இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தமது நாடு எப்போதும் ஆதரவளித்து வருவதாக அவர் சபையின் அமர்வின்போது குறிப்பிட்டார். இந்த விடயத்தில், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை […]

Continue Reading

இலங்கைக்கு எதிராக களமிறங்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து,செப் 13 கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் நியூசிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், 2022 முதல் பாதியில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அதிகாரிகளால் அமைதியான பதில் கிடைத்ததாக நியூசிலாந்து தூதுக்குழு குறிப்பிட்டது. “எவ்வாறாயினும், எதிர்ப்பாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் சமீபத்தில் நடத்திய அடக்குமுறை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கு முழு பாதுகாப்பை உறுதி […]

Continue Reading

ஆதிவாசிகள் பரம்பரை என்பதாலா வசந்த முதலிகே பழிவாங்கப்படுகிறார்: வன்னிலா கேள்வி

கொழும்பு,செப் 13 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதன் காரணமாகவா பழிவாங்கலுக்கு உட்படுத்தப்படுகிறார் என கேள்வியெழுப்பிய ஆதிவாசிகள் இனத் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ, வசந்த முதலிகேவை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் , அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆதிவாசிகள் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதாலா பழிவாங்கலுக்கு உற்படுத்தப்படுகிறாரா? பொது பிரச்சினைகளுக்காக குரல் […]

Continue Reading

கல்முனையில் 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்

கல்முனை,செப் 13 இளம் பிக்குகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (13) உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (13) கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே […]

Continue Reading

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தல்

கொழும்பு,செப் 13 இலங்கை மீதான ஜெனீவாவின் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச மன்னிப்புசபை, ஃபோரம் ஏசியா, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு ஆகியவையே வலியுறுத்தியுள்ளன.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பான, தற்போதைய ஆணைகளை வலுப்படுத்தும் மற்றும் நாட்டின் சீரழிந்து வரும் மனித உரிமை […]

Continue Reading

ரயிலுடன் வேன்மோதி விபத்து: சாரதி பலி

அம்பலாங்கொடை,,செப் 13 அம்பலாங்கொடை, வேனமுல்ல புகையிரத கடவை ஊடாக பயணித்த வேன் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் வேனின் சாரதி (வயது 67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞை  நீண்ட காலமாக செயலிழந்துள்ளதாக  பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

Continue Reading

சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடி காலத்தை நீடிக்க தீர்மானம்

கொழும்பு,செப் 13 ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனூடாக 6 மாதங்களுக்காக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடித்துக்கொள்ள முடியுமென திணைக்களம் கூறியுள்ளது. இதனிடையே, மோட்டார் வாகன போக்குவரத்து […]

Continue Reading

அப்பியாச புத்தகங்களின் விலை அதிகரிப்பு

கொழும்பு, செப் 13 40 பக்கங்களைக் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 65 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது. 120 ஆக இருந்த 120 பக்க அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை 120 ரூபாயில் இருந்து 225 ஆகவும் 80 பக்க புத்தகம் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை 40 பக்க CR புத்தகத்தின் புதிய விலை 150 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் 40 பக்கங்கள் கொண்ட வரைபு […]

Continue Reading

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

கொழும்பு, செப் 13 கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் குறித்து அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 700 மில்லியன் டொலர்கள் செலவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை 2025ஆம் […]

Continue Reading

சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

கொழும்பு, செப் 13 பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார். அவர் இறக்கும் போது 96 வயதாகும். சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். அன்னாரின் பூதவுடல், இல. 10, எம்.சி. வீதி, ராகுல மாவத்தை, மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading