NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்

கொழும்பு, செப் 13 NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்தார். பொருத்துதல் மற்றும் அரைத்தல் போன்ற தொழில்வாய்ப்புகளுக்கு குறித்த சான்றிதழ் அவசியமில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் குறித்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப கட்ட வேதனமாக எட்டரை இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் […]

Continue Reading

விமல் வீரவன்சவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த இருவர் கைது

கொழும்பு, செப் 13 மாலபே பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கஹவத்தை மற்றும் கம்புறுபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு அண்மையில்  சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்காரணமாக பல பெறுமதியான உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.

Continue Reading

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

கொழும்பு, செப் 13 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிடுவதற்கான அவசர தொலைபேசி இலக்கம் உட்பட தகவல்களைப் பெறுவதற்கு மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி […]

Continue Reading

இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா, சீனாவுடன் சர்வதேச நிறுவனம் பேச்சுவார்த்தை

கொழும்பு, செப் 13 இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான லசார்ட் (Lazard) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, கடன் நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது. அரசாங்கத்தின் சுமார் 85 பில்லியன் டொலர் முதல் 100 பில்லியன் டொலர் வரையான கடன் மறுசீரமைக்கும் […]

Continue Reading

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்

முல்லை, செப் 13 ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் […]

Continue Reading

மனித உரிமை, ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை: ஜெனீவாவில் நுவான்

சுவிஸ் செப் 13 ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவான் போபகே ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை பொய்ப்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் தன்னையும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் கைதுசெய்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் […]

Continue Reading

அமைச்சரவை உப குழு நியமனம்

கொழும்பு, செப் 13 பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் தற்போதைய நாட்டின் சூழ்நிலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 5 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இந்த உபக் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார சிக்கல் நிலைமைகள் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து தீர்மானங்களை ஆராய இந்த உப குழு நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

கொழும்பு, செப் 13 இந்த வருடத்தின் இரண்டாவது பாடசாலை தவணை இன்று ஆரம்பமானது. பாடசாலை கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 02ம் திகதி வரை இடம்பெறும். இந்த காலப்பகுதிக்குள் முடிந்தளவு பாடங்களை கற்பிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பாடவிதானத்திற்கு புறம்பான வெளிவாரியான செயற்பாடுகளை பாடசாலை நேரத்திற்கு அப்பால்பட்ட சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் வைபவங்களை முடிந்தளவு மட்டுப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இலங்கையில் தினமும் 10 மணித்தியால மின்துண்டிப்பு

கொழும்பு,செப் 13 இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான 960,000 மெற்றிக் தொன் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். அதனால் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு […]

Continue Reading

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்

கொழும்பு, செப் 13 அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது, ​​அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார். தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார். அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி கட்டுப்பாடு அமுலில் உள்ளதாகவும், அது […]

Continue Reading

ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு: ஜெலன்ஸ்கி

கீவ், செப் 13 உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போரில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனை தாக்க தொடங்கின. ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், உக்ரைன் வசம் இருந்த பல […]

Continue Reading

வெள்ளவத்தை கடற்பரப்பில் 40 முதலைகள் சுற்றுகின்றன

கொழும்பு, செப் 13 வெள்ளவத்தை கடலில் சுமார் 40 முதலைகள் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை கடலில் நீராடச் சென்ற கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவன ஊழியர்கள், முதலை குட்டி ஒன்றை பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சவோய் தியேட்டர் அருகே உள்ள கால்வாயில் நான்கு பெரிய முதலைகள் காணப்பட்டதுடன். வெள்ளவத்தை பிரதேசத்தில் 40 முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முதலைகள் தொடர்பில், கின்ரோஸ் உயிர்காப்பு நிறுவனம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் […]

Continue Reading