மின் வெட்டை அமல்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி

கொழும்பு, ஜனவரி 24: மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே திங்கள்கிழமை தெரிவித்தார். நாடு முழுவதும் திங்கள்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் திங்கள்கிழமை காலை அறிவித்திருந்தது. நாட்டின் அனைத்துப் பாகங்களிலும், சுழற்சி முறையில் திங்கள் மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் […]

Continue Reading

மீண்டும் சுற்றுலாப் பயணிகள்

நிகழாண்டின் முதல் 20 தினங்களில்  53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “தினம்தோறும்  சுமார்  3,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு  வருகை தருகிறார்கள். நிகழாண்டின் முதல் 20 தினங்களில்  இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில்,  ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் வந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Continue Reading

புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் இனை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்ததாக வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தப்பட்ட பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சுங் நியமிக்கப்படுவார். தற்போது அமெரிக்க தூதுவர் அலைனா அலெய்னா டெப்லிட்ஸ் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வீட்டிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி! 17 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொட்டகலை சுகாதார பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஃபாரஸ்ட்விக் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 19 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்திருந்தார். இவருடைய உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொட்டகலை பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கோவிட் […]

Continue Reading

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் – சஜித் பிரேமதாச

பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளதோடு , உங்களால் முடியவில்லை என்றால் முடியாது எனக் கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருட்களின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , ‘ பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். உங்களால் நிர்வகிக்க […]

Continue Reading

இதுவரை காலியிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இனங்காணப்பட்ட 1000 தொற்றாளர்களில் பதிவான மரணங்கள் எத்தகையதாக இருக்கின்றது என்று நோக்கும்போது, காலி மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதுடன் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் இம்மாவட்டங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களில் மரணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையும் உயர்வடையும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: […]

Continue Reading

யாழில் உள்ள உள்ள ஜனாதிபதி மாளிகையை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : அம்பலப்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சீன நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முடக்க நிலையில் உள்ள யாழ்.நல்லூர் அரசடி கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கிய பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். கீரிமலை ராஜபக்ச மாளிகை என நாங்கள் அறிந்துகொண்டிருக்கின்ற, இந்த இடமும் விற்பனைக்கு விடப்படுவதாக சொல்லப்படுகின்றது. இது […]

Continue Reading

3 மாதங்களுக்கு தேவையான பணமே இலங்கையின் கையிருப்பில் உள்ளது : மத்திய வங்கி அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான இறக்குமதிகளுக்கு செலுத்துவதற்கு மாத்திரம் போதுமான அந்நிய செலாவணியே இலங்கையின் கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் உத்தியோகபூர்வமாக நான்கு பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்துள்ளார். சீனாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிமாற்ற வசதிகளுக்காக கிடைத்ததுடன் இந்த தொகையானது நாட்டுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான இறக்குமதிக்கு […]

Continue Reading

முன் தொகையாக 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரியது இலங்கை அரசு

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் நஷ்ட ஈட்டு முன் தொகையாக 40 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசு கோரியுள்ளது. அத்துடன், கப்பல் தீ பற்றியதன் விளைவாக ஏற்பட்ட ஏனைய பாதிப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் 5 குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Continue Reading

விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து பாரவூர்தி விபத்து: சாரதி பலி – 1,600 கோழிகளும் உயிரிழப்பு

1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று, மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மொரகஹமுல, கல்ஓய பாலத்துக்கு அருகில் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பாரவூர்தியின் சாரதி பலியானதுடன், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட 1,600 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிபிலை பிரதேசத்திலிருந்து கண்டி, கம்பளை பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்த சாரதி, கட்டுகிதுல, மீகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஷேன் தனுஷ்க என்பவரே உயிரிழந்தவராவார். இந்த பாரவூர்தி கல்ஓய பாலத்துக்கு அருகில் […]

Continue Reading

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாகிஸ்தான் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இலங்கைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைதொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறிப்பிடப்படுகின்றது. இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என […]

Continue Reading

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் 27 பேர் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27 ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி சென்றடைந்துள்ளனர். தூத்துக்குடிக்கு சென்ற 27 […]

Continue Reading