ஃபெங்கல் புயல் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி […]

Continue Reading

விவசாயிகளுக்கு விருந்தளித்த தமிழக வெற்றிக்கழக தலைவர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார்.இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு நிலங்கள் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் நிகழ்வு தற்போது சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றுவருகின்றது. அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விஜய் இதன்போது […]

Continue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: மகன் அமீன் விளக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி சாயிராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.  அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்திற்கு பிறகு அவரது இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டே என்பவரும் கணவரைப் பிரிவதாக அறிவித்தார்.  இந்த செய்தி வைரலான பிறகு ரஹ்மான் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என இணையத்தில் பல சர்ச்சையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால் அந்த பெண்ணுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என சாயிராவின் வக்கீல் விளக்கம் கொடுத்தார்.  இதற்கு பல […]

Continue Reading

கேரளாவில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம்!

கேரளா – கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை (20) முதல் செயல்பட உள்ளது.  இந்தியாவிலேயே முதலாவது முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கேரள உச்ச நீதிமன்றத்தில் நடந்த விழாவின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்துள்ளார்.  இந்நிலையில் நாளை (20) முதல் அது செயற்பாட்டுக்கு வருகின்றது.  இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.  பிணை பெறுவதற்குக் கட்சிக்காரர்கள் மற்றும் பிணைதாரர்கள் முன்னிலையாகத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் பிணையைப் பெறுவதற்கான […]

Continue Reading

கங்குவா படத்தின் முக்கிய டெக்னீஷியன் உயிரிழப்பு

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் கங்குவா படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ் திரையுலகின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கங்குவா இருக்கிறது. இந்த நிலையில், கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் உயிரிழந்த சம்பவம் படக்குழு மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பில்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். […]

Continue Reading

தனுஷ் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்- துஷாரா விஜயன்

சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். தொடர்ந்து அநீதி என்ற படத்தில் அர்ஜுன் தாசுடன் இணைந்து நடித்திருந்தார். இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படத்திலும் துஷாரா விஜயன் பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் துஷாரா […]

Continue Reading

வெள்ள நீரில் சிக்கி அண்ணன், தங்கை பலி!

இந்தியா – பெங்களுருவில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெங்களுரு – கெங்கேரி பகுதியில் நடந்து சென்ற அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவர் வெள்ள நீரில் சிக்கி ஆற்றிற்குள் விழுந்து உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் 13 வயதுடைய சீனிவாஸ் மற்றும் 11 வயதுடைய லட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சீனிவாஸின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் லட்சுமியின் உடலைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

Continue Reading

`சீக்கிரமா படம் பண்ணுவோம் .. அதான் துப்பாக்கிய வாங்கிடாருல’ – லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்தப் […]

Continue Reading

18 வயது பெண்ணை உடன்கட்டை ஏற்றிய இந்தியாவின் கடைசி சதி வழக்கு: 37 ஆண்டுகள் கழித்து 8 பேர் விடுதலை

உடன்கட்டை எனும் சதி ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர். இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர். சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற […]

Continue Reading

இளமையான தோற்றத்தில் எம்.எஸ்.டோனி

இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம். வரும் ஐபிஎல் தொடரில் அப்கேப்புடு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சென்ற வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த டோனி தற்போது […]

Continue Reading

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை,10 இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. இந்நிலையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்புகாரணமாக அவர் நேற்று நள்ளிரவு காலமானார். ரத்தன் […]

Continue Reading

70-வது தேசிய திரைப்பட விழா: சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற நித்யா மேனன்

70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாழில் கலந்துக் கொண்டனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர். சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.

Continue Reading