இந்தோனேசியாவில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி

ஜகார்த்தா:30 இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட […]

Continue Reading

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன, ரஷிய ராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின. முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் […]

Continue Reading

வான்கோழி கறி விருந்து.. விண்வெளியில் Thanks Giving கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தாங்க்ஸ் கிவ்விங் […]

Continue Reading

நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி […]

Continue Reading

முன்னாள் காதலனின் ரூ.5900 கோடி மதிப்புள்ள பிட்காயினை தவறாக குப்பையில் வீசிய பெண்

இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவரது முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு 569 மில்லியன் பவுண்ட்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி) ஆகும். ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இதற்கிடையே வீடுகளை சுத்தப்படுத்தும்போது, அந்த பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை அவரது முன்னாள் காதலி ஹல்பினா […]

Continue Reading

எலான் மஸ்க் போட்ட ஒரே டுவீட்: USA அரசு ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்

அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் 2025 ஜனவரி மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். அண்மையில், காலநிலை தொடர்பாக பணிபுரியும் 4 அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்கிற ஸ்க்ரீன்ஷாட்டை எலான் மஸ்க் தனது […]

Continue Reading

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:28 அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு […]

Continue Reading

போலீஸ் வாகனம் மோதி, விபத்தில் சிக்கிய நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் நிதியமைச்சர் நிகோலா வில்லிஸ் ஆகியோரை ஏற்றிச் சென்ற சொகுசு வாகனத்தின் (லிமோசின்) பின்புறத்தில் காவல்துறையின் கார் மோதி விபத்துக்குள்ளானது. பாராளுமன்றம் அமைந்துள்ள நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நேற்று பிற்பகல் சிறிய விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்நாட்டு விவகாரத் துறை, உத்தியோகபூர்வ வாகனங்களை நிர்வகிக்கும் நிறுவனம், சொகுசு கார் பின்புறம் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில், […]

Continue Reading

இந்து மத துறவி கைது: அமெரிக்க பாடகி கண்டனம்

வாஷிங்டன்:28 வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் […]

Continue Reading

அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:27 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். பணிவாக இருக்கிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அதனால் அவர்கள் மீண்டும் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். […]

Continue Reading

சீன உணவகத்தில் விற்பனையாகும் தவளைக்கறி பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவில் சீன உணவகம் ஒன்றில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா குறித்த காட்சிகள் உள்ளன. அங்குள்ள ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது. அதில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, […]

Continue Reading

Stress- ஐ குறைக்க 1000 வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த திகில் ஆசாமி

ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர். விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் […]

Continue Reading