காசாவில் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா இளவரசர் கடும் எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதியின் ரியாத்தில் அரபு நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில் முகமது பின் சல்மான் பேசியதாவது:- காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை […]

Continue Reading

மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்

போர்ட் லூயிஸ்:12 இந்தியப் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு மொரிஷியஸ். இந்தநாட்டில் (நவ. 10) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் 62 பேர் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியை தழுவியது. பிரதான […]

Continue Reading

பிறப்புறுப்பில் ஊசி:18 ஆண்டுகளாக தீராத வலியை அனுபவிக்கும் பெண்

தாய்லாந்து நாட்டில் நரத்திவாத் மாகாணத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு பல வருடங்களாக வயிற்றின் அடிப்பகுதியில் வலி இருந்து வந்துள்ளது. இதுபற்றி தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்தபோது தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யும் ஊசி ஒன்றை மருத்துவ பணியாளர், பெண்ணின் பிறப்புறுப்பில் தவறுதலாக விட்டு விட்டார். பிரசவத்திற்கு பின்பு தையல் போடும்போது நடந்த இந்த சம்பவத்தில், அந்த ஊசியை எடுக்கும் முயற்சியில் டாக்டர் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஊசி இருக்கும் இடம் […]

Continue Reading

சிக்கிமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

காங்டோக்,12 வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் தலைநகர் காங்டோக்கில் இருந்து மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று மதியம் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேபோல், நிலநடுக்கத்தின் தாக்கம் சிறிய அளவில் இருந்ததால் பொருள் இழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அது பொய் தகவல்: டிரம்ப் எங்களுக்கு போன் பண்ணவே இல்லை – ரஷியா

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று அசத்தினார். அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் உரையாடினர் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. இது குறித்து வெளியான தகவல்களில் டொனால்டு டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் கூறப்பட்டது. […]

Continue Reading

ரஷிய அதிபர் புதினுக்கு போன் செய்து பேசிய டிரம்ப்: உக்ரைன் போருக்கு முடிவு?

உலகமே எதிர்நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் நின்ற முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த 2016 முதல் 2020 வரை டிரம்ப் அதிபராக இருந்தபோது சர்வதேச அரசியல் சூழலில் இணக்கத்தைப் பேணி வந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் முதல் முறையாக வட கொரியாவுக்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்திப்பதெல்லாம் டிரம்ப்பின் ஆட்சி காலத்திலேயே நடந்தது. இந்நிலையில் மீண்டும் […]

Continue Reading

ராஜினாமா செய்துவிட்டு கமலா ஹாரிஸை அதிபராக்கவும்: பைடனுக்கு முன்னாள் உதவியாளர் பரிந்துரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால் டிரம்ப், ஜனநாயக கேட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்தார். இதனால் அமெரிக்காவின் முதன் பெண் அதிபர் என்ற சாதனையை படைக்க முடியாமல் கமலா ஹாரிஸ் ஏமாற்றம் அடைந்தார். இந்தநிலையில் ஜோ பைடன் ராஜினாமா செய்து குறுகிய காலத்திற்கு கமலா ஹாரிஸை அதிபர் ஆக்கினால் முதல் பெண் அதிபர் என்ற சாதனையாகிவிடும் என கமலா ஹாரிஸின் முன்னாள் தகவல்தொடர்பு இயக்குனர் ஜமால் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் அசைவ உணவு – விமர்சித்த இந்து தலைவர்கள்

அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தீபாவளி கொண்டாடியுள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமரின் தீபாவளி விருந்தில் ஆட்டுக்கறி, பீர், ஒயின் ஆகிவையை பரிமாறப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் சில இந்து தலைவர்கள் அந்நாட்டு பிரதமரை […]

Continue Reading

இஸ்ரேல்- ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து கத்தார் விலகல்

அக்டோபர் 7 தாக்குதல் கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான ஹமாஸ் அந்நாட்டுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் 250 பேர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பழிக்குப் பழி இந்த அடியை எதிர்பார்த்திராத இஸ்ரேல் பழிக்குப் பழி வாங்க பாலஸ்தீன நகரங்களின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அவ்வாறு தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதல்கள் கடந்த 13 மாதங்களாக […]

Continue Reading

லெபனானை உலுக்கிய பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

பாலஸ்தீனம் மீர் போர் தொடுத்து கடந்த 13 மதங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் இருந்தபடி செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் நெருக்கடியைத் தந்து வந்தது. லெபனான் எல்லையில் இருந்தபடி இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் ஹிஸ்புல்லா மீதான அதிரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் திட்டம் டீ தீட்டி வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைவரையும் அதிரவைத்த அந்த சம்பவம் […]

Continue Reading

டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்திய உக்ரைன்: விமான நிலையங்களை மூடிய ரஷியா

மாஸ்கோ:11 உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் ராணுவம் மொத்தம் 34 டிரோன்களைக் கொண்டு இன்று தாக்குதல் நடத்தியது. ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 34 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு […]

Continue Reading

உக்ரைன் டிரோன் தாக்குதல்: 2 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடிய ரஷியா

மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும் கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்தில் 12 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார். “முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தாக்குதல் காரணமாக சேதமோ அல்லது […]

Continue Reading