வங்காளதேசத்தில் வன்முறை: 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல்

டாக்கா:27 வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்தது. மேலும் 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டு முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, […]

Continue Reading

பாகிஸ்தானில் 144 தடை உத்தரவை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் பேரணி: 4 ஆயிரம் பேர் கைது

இஸ்லாமாபாத்:26 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அரசு கருவூலத்துக்குச் சொந்தமான பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். எனவே இஸ்லாமாபாத் கோர்ட்டு அவர்களுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய […]

Continue Reading

கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி: டிரம்ப்

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிராம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால் குற்றம் மற்றும் டிரக்ஸ் (போதைப்பொருள்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். அதை அனைவரும் […]

Continue Reading

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு

காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 1-ந்தேதியில் இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. லெபானான் மீது தரைவழி மற்றும் வான் தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்தது. அதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட […]

Continue Reading

மூன்றாம் பாலினத்தவர் மீது வன்மத்தை கக்கும் டிரம்ப்: திருநங்கைகளுக்கு ராணுவத்தில் மீண்டும் தடை?

பழமைவாதியான டொனால்டு டிரம்ப் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த அவர், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார். அவர்களுக்கு எனத் தனியாகக் கவனம் மற்றும் ஏற்படும் செலவு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர் இதை செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினார். இப்போது பிரச்சனை […]

Continue Reading

6 பாதுகாப்பு வீரர்கள் பலி: போராட்டக்காரர்களை கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள்-பாக். ராணுவம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72), மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். ஆனால், இம்ரான்கானை விடுதலை செய்ய அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் […]

Continue Reading

டிரம்ப் மீதான தேர்தல் முறைகேடு வழக்கு தள்ளுபடி

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் அளித்த மனுவில், அதிபரிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதித் துறைக் கொள்கையில் அனுமதி இல்லை என தெரிவித்து […]

Continue Reading

ரூ.2.4 கோடிக்கு ஏலம்: சுட்டி குழந்தை சாம் கரணை தட்டி தூக்கிய சென்னை அணி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் […]

Continue Reading

குட்டித் தூக்கம் போட்ட ஊழியர்.. பணிநீக்கம் செய்த நிறுவனம்: ரூ. 42 லட்சம் அபராதம்

ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு […]

Continue Reading

மெக்சிகோவில் சோகம்: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

மெக்சிகோ சிட்டி,25 வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை […]

Continue Reading

250 ராக்கெட்களை வீசி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு

பெய்ரூட்:25 இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் […]

Continue Reading

துருக்கியில் ரஷிய விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் […]

Continue Reading