ராணுவ வேலையை தவிர்க்க மானாவாரியாக சாப்பிட்டு கொழுத்த இளைஞர்: பிடித்து ஜெயிலில் போட்ட அரசு

தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். […]

Continue Reading

விபத்துக்குள்ளான சரக்கு விமானம்: ஒருவர் உயிரிழப்பு!

லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் விமான நிலையத்திற்கு அருகில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.  ஸ்பெயின் சரக்கு விமான நிறுவனமானதொன்றுக்குச் சொந்தமான போயிங் 737 எனும் விமானம் தரையிறங்குவதற்கு முற்பட்ட நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் லிதுவேனியா அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading

உக்ரைன் மீது தாக்குதல் தீவிரம்: ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு

மாஸ்கோ:23 ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்க உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான […]

Continue Reading

ரஷியாவுக்கு சட்ட விரோதமாக விமானப் பொருட்கள் வினியோகம்: அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கைது

அமெரிக்காவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி ரஷிய நிறுவனங்களுக்கு விமான உதிரிபாகங்களை வாங்கிய குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை தளமாகக் கொண்ட அரேசோ ஏவியேஷன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் கவுசிக், அமெரிக்காவுக்கு சென்றபோது மியாமியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. ரஷியாவில் உள்ள நிறுவனங்களுக்காக அமெரிக்காவிடமிருந்து விமானப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாகப் பெறும் சட்டவிரோத கொள்முதலில் கவுஷிக் இருந்ததாகவும், அவர் தனது ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட அசோசியேட் மார்கஸ் […]

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வந்தால் கைது செய்வோம்: இங்கிலாந்து அறிவிப்பு

லண்டன்:23 பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு […]

Continue Reading

அமெரிக்காவில் சோகம்: பிறந்தநாளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி

வாஷிங்டன்:23 தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆர்யன் ரெட்டி குடும்பத்தினர். தற்போது உப்பல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். ஆர்யன் ரெட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள கன்சாசில் முதுகலை பட்டப்படிப்பில் படித்து வந்தார். இந்நிலையில், ஆர்யன் ரெட்டி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, சமீபத்தில் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி தற்செயலாக சுட்டதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், ஆர்யன் அறைக்கு வந்த அவரது […]

Continue Reading

மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது: உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி சொல்கிறார்

கியேவ்:23 ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில், ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் “2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. 10,000 […]

Continue Reading

புதின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: உக்ரைனுக்கு வாரிக்கொடுத்து ரஷியாவை சீண்டும் ஸ்வீடன்

உக்ரைன் போர் ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார். இதனை பயன்படுத்தி அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் […]

Continue Reading

மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 10, 800 துருப்பினர்கள்!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 துருப்பினரை இந்திய மத்திய அரசாங்கம் இன்று அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான துருப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனங்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் இடம்பெற்றுள்ளதன் காரணமாகவே மேலதிக துருப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினருடன் சேர்த்து, தற்போது மணிப்பூரில் மொத்தமாக 288 படையணிகள் நிலைகொண்டுள்ளன. கடந்த வருடம் மே […]

Continue Reading

கனடாவில் இலங்கையர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை!

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  27 வயதான குறித்த நபர் தமது தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உயிரிழந்தவரின் மனைவி அயலவர்களின் உதவியைக் கோரியதை அடுத்து அயலவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த நபர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் […]

Continue Reading

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்:22 பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய கமாண்டர்கள் உள்பட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 38 பேர் உயிரிழந்தனர் […]

Continue Reading

இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது- மற்றொரு வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிரடி

இஸ்லாமாபாத்:22 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன. அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த […]

Continue Reading