கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ: 135 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசம்

அமெரிக்கா,ஜுன் 30 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது. இந்த காட்டுத்தீயால் கலிபோர்னியாவின் வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலமாகவும் காட்சியளிக்கின்றன. காடுகள் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், இதுவரை 75 சதவீத காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

நைஜீரியாவில் பஸ் எரிந்தது 5 பேர் உடல் கருகி பலி

நைஜுரியா,ஜுன் 30 நைஜீரியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் leɪɡɒs லேகோஸ்-இபடான் நெடுஞ்சாலையில் ஒரு பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த பஸ் தீப்பிடித்தது. குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி துடித்தனர். தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருகி இறந்தனர். […]

Continue Reading

அமெரிக்காவின் பிரபல பாடகருக்கு 30 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகர் ஆர்கெல்லி, பெண்கள், சிறுமிகள் மற்றும்சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம்செய்ததற்காக 30 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான அவர் எதிர்கொண்ட அனைத்துஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனநிரூபிக்கப்பட்டார். தண்டனையை நீதிபதி ஆன் டோனெல்லிபுரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில்அறிவித்தார். “ஆர். கெல்லிக்கு 30 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்றுநியூயோர்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கானஅமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் ஒருட்வீட்டில் தெரிவித்துள்ளது. பாடகருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள்சிறைத்தண்டனை வழங்குமாறுவழக்கறிஞர்கள் கோரினர், ஏனெனில் அவர்“பொது மக்களுக்கு கடுமையான ஆபத்தைஏற்படுத்துகிறார்” என்று அவர்கள்குறிப்பிட்டனர். “அவரது நடவடிக்கைகள் […]

Continue Reading

நேட்டோ படைகளை வரவேற்றால் கடும் விளைவுகள்: சுவீடன், பின்லாந்துக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, ஜுன் 30 நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மேட்ரிட் நகரில் நடந்த அந்நாட்டு தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோவில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், நேட்டோ உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய […]

Continue Reading

சர்வாதிகாரியின் மகன் பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்பு

கொழும்பு, ஜூன் 30 பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸின் 17வது அதிபராக வியாழன் அன்று பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 9ம் திகதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாங் மார்கோஸ் என்று அழைக்கப்படும் பெர்டினான்ட் ரொமால்டெஸ் மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றி பெற்றார். இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்த பெர்டினான்ட் இமானுவேல் எட்ராலின் மார்கோஸ் சீனியரின் மகன் ஆவார். மக்கள் எழுச்சியில் அவரது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட 36 ஆண்டுகளுக்குப் […]

Continue Reading

சுவீடன், பின்லாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு

வாஷிங்டன், ஜுன் 30 நேட்டோ உறுப்பினர் நாடுகளாக சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், மேட்ரிட் நகரில் நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோவில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். இதனால், நேட்டோ உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகள் […]

Continue Reading

கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக அழிக்கப்படவில்லை

அமெரிக்கா, ஜுன் 30 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, வைரஸ் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் 110 நாடுகளில் மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் BA 4 மற்றும் BA 5 ஆகிய மாறுபாடுகள் காரணமாகவே இவ்வாறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து […]

Continue Reading

கனடா வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை

ஒட்டாவா, ஜுன் 30 கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் தீவில் அமைந்துள்ளது சானிச் நகரம். அமெரிக்க எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. வங்கியில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு […]

Continue Reading

பாகிஸ்தானில் தொடர் மின்வெட்டு: மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

இஸ்லாமாபாத், ஜுன் 29 நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அந்த நகர மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் […]

Continue Reading

ரஷியாவில் நுழைய ஜோ பைடன் மனைவி, மகளுக்கு தடை

மாஸ்கோ, ஜுன் 29 உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்கர்களுக்கு ரஷியாவும் பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லே உள்ளிட்ட 25 பேர் ரஷியாவில் நுழைவதற்கு தடை விதித்து அதிபர் புதின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ரஷிய எதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தியதாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் மிட்ச் மேக்கனல், […]

Continue Reading

உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெறக்கூடாது: பிரான்ஸ் ஜனாதிபதி

பெர்லின், ஜுன் 29 ஜெர்மனியில் நடைபெற்ற ‘ஜி-7’ நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன் போர் விவகாரம் முக்கிய விவாத பொருளாக அமைந்தது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்தும் ‘ஜி-7’ தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர். இந்த நிலையில் ‘ஜி-7’ மாநாட்டின் நிறைவில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் உக்ரைன் போரில் ரஷியா வெற்றி பெறக்கூடாது என கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ” ‘ஜி-7’ நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் […]

Continue Reading

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா சான்றிதழ் பயன்பாடு நீட்டிப்பு

பிரசல்ஸ், ஜுன் 29 ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டார் அல்லது அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது அல்லது கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டார் என்று காட்டுகிற வகையில் கொரோனா சான்றிதழ் வழங்கி அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு இந்த கொரோனா சான்றிதழ்கள் வழங்குகின்றன. இது ஐரோப்பிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கு அவசியமாகிறது. […]

Continue Reading