மனிதர்கள் தயவுசெய்து செத்துவிடுங்கள்: இளைஞருக்கு ஏஐ கொடுத்த திகில் பதில்

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த விதய் ரெட்டி என்ற 29 வயதான பட்டதாரி இளைஞர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பினார். வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போன்று அந்த வாலிபர் மற்றும் சாட்பாட் இடையேயான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. அப்போது இயல்பாக பதில் அளித்த சாட்பாட், திடீரென அந்த இளைஞரை திட்டி உள்ளது. இது அந்த […]

Continue Reading

அடுத்த ஈரான் உயர் தலைவரை படு ரகசியமாக தேர்வு செய்த அயத்துல்லா காமேனி?

ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார். ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் […]

Continue Reading

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்திய செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

வாஷிங்டன்:18 உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜி.சாட் தகவல் தொழில் நுட்ப செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா கேப் சுனாவரலியில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி […]

Continue Reading

வங்கதேசத்தில் வேகமாக பரவும் டெங்கு: ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் கொசுக்களால் பரவும் வைரல் காய்ச்சலான டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் முழுவதும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,389 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையின் மூலம், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது. […]

Continue Reading

அமெரிக்கா: லூசியானா மாகாணத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸில் உள்ள செயின்ட் ரோச் (St Roch neighbourhood) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தனியார் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் அல்மோனாஸ்டர் அவென்யூ பிரிட்ஜ் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்த நிலையில் […]

Continue Reading

ரஷியாவின் உள்பகுதிகளை தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு ஒப்புதல் அளித்த ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வருவதால் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அதை பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க திட்டவட்டாக தெரிவித்திருந்தது. தற்போது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை […]

Continue Reading

உடல்நலம் குறித்து வதந்தி: சுனிதா வில்லியம்ஸின் புதிய புகைப்படத்தை வெளியிட்ட நாசா

நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் […]

Continue Reading

10 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் […]

Continue Reading

நேதன்யாகு வீடு தாக்கப்பட்டதன் எதிரொலி – காசா குடியிருப்பு மீது குண்டு மழை – 72 பேர் பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக […]

Continue Reading

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம்: முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் […]

Continue Reading

உக்ரைன் மின் உற்பத்தியை சீர்குழைக்க ரஷியா சரமாரி தாக்குதல்

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.இந்த போரில் இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு […]

Continue Reading

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றது. இதில் 117 பணய கைதிகளை இஸ்ரேல் உயிருடன் மீட்ட நிலையில், 101 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் […]

Continue Reading