கொழும்பில் அதிகரித்துள்ள நுளம்பின் பெருக்கம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொழும்பு,ஜுன் 10 கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபை, கொதடுவை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index இல் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார். பொதுவாக Breteau Index மதிப்பு 5% ஆக இருக்க வேண்டும் […]

Continue Reading

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

இன்று பிற்பகல் 2 மணி முதல் காலி வீதி – தெல்வத்தை சந்தியில் இருந்து சீனிகம வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்வத்த – ரத்பாத் ரஜமஹா விகாரையின் மிஹிந்து பெரஹெர வீதி உலா காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்தை மற்றும் சீனிகம வரையான பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் பொதுமக்களுக்காக திறப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை முதாலம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களின் சார்பில் திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறை. பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் ஜூலை 1 ஆம் திகதி காலை 9 மணி முதல் […]

Continue Reading

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 10 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்தும் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்தத் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இலங்கை அணியில் […]

Continue Reading

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி பெற நடவடிக்கை?

கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கஞ்சா வளர்ப்பு திட்ட அறிக்கையை சமர்ப்பித்த உள்ளூர் முதலீட்டாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

தனியார் கல்வி நிலையங்களை பதிவு செய்வது கட்டாயம்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரம் 9-க்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ். மாவட்ட சுகாதார தரப்பினர், பொலிஸார், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது […]

Continue Reading

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – ஆஸி. 2வது இன்னிங்ஸ்: உணவு இடைவேளை வரை 201/6

லண்டன், ஜுன் 10 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3-வது நாள் அட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 34 ரன்கள் எடுத்த […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் சந்திப்பு

சென்னை,ஜுன் 10 நடிகர் ரஜினிகாந்த் உடன் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் சந்தித்து பேசினார் அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆஸ்திரேலிய தூதர் பெரி ஓ பாரல் , நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தத்தில் மகிழ்ச்சி. ஜெயிலர் படத்துக்கு ஆஸ்திரேலிய தூதர் வாழ்த்து தெரிவித்தார். கலாச்சாரங்களையும், நாடுகள் இடையே மக்களையும் சினிமா இணைக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தத்தில் மகிழ்ச்சி . ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என பதிவிட்டுள்ளார்.

Continue Reading

முல்லேரியா சிறுவன் மரணம்: கைதானவருக்கு விளக்கமறியல்

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று(09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

Continue Reading

4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 3,000 முறைப்பாடுகள்!

இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் எண்ணாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் மூவாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார […]

Continue Reading

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரிப்பு: நிலீகா மலவிகே

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000 வீதமாக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 184 ஆகும் […]

Continue Reading

அறுகம்பே கடலில் மூழ்கிய மூவர் மீட்பு

அறுகம்பே உல்ல கடற்கரையில் நீராட சென்ற மூவர் காணாமல் போன நிலையில் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த மூவரை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 40 வயது உடைய பெண் ஒருவரும் 11 வயது சிறுவனும் 17வயதுடைய இளைஞனும் இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading