எரிபொருள் விலையில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 309 ரூபாவாகும். 283 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். மேலும், மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு […]

Continue Reading

யாழில் பூசகரிடம் பணம், நகை கொள்ளை: மூவர் கைது!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்போது பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள்,  நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் நகையை விற்று பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட […]

Continue Reading

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக பதுளை – எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading

நாட்டு அரிசி இறக்குமதிக்கு விலைமனு கோரல் ஆரம்பம்!

இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் சமித பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

Continue Reading

“ஃபெஞ்சல்” புயல் தாக்கம்: காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” புயலின் தாக்கம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (30) காற்றின் தரம் குறைவடையலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டில் சில பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 92 – 120 வரை காணப்படலாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, குருணாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, புத்தளம், பதுளை, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, பொலன்னறுவை […]

Continue Reading

கொழும்பில் ரூ.40 லட்சம் பெறுமதியான மஞ்சள் தொகை மீட்பு!

கொழும்பு 15 இல் உள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோ கிராம் மஞ்சள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபா என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பற்றுச்சீட்டு இல்லாமல், எந்தத் தகவலும் குறிப்பிடப்படாமல் சந்தையில் விற்பனை செய்வதற்கு […]

Continue Reading

ஐந்து மாத குழந்தையின் தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு 

ஐந்து மாத குழந்தையொன்றின் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த இந்த தாய் குருநகர் பகுதியில் உள்ள தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சளி அதிகரிப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை கொண்டதோடு உடற்கூற்று பரிசோதனைக்கும் அறிவுறுத்தியுள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் இதய வால்வுகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இதயம் செயலிழந்தமையாலேயே இந்த தாய் […]

Continue Reading

வரி செலுத்துனர்களுக்கான விசேட அறிவித்தல்!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் நாளையுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும், அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் நாளை வழமையான வேலை நாளாக திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை […]

Continue Reading

சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் அனைத்தும் அரசிடம் கையளிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேரிடம் இருந்து உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதன்படி, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் […]

Continue Reading

கரையை கடக்கும் புயல்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை இன்று (29) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக உருவெடுத்து திருகோணமலைக்கு வடகிழக்கே 310 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துரைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் […]

Continue Reading

சீரற்ற வானிலையால் இதுவரை 14 பேர் பலி-இருவர் மாயம்-4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 232 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பதுளை, அம்பாறை, புத்தளம், திருகோணமலை மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் அனர்த்தத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 289 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 42 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற […]

Continue Reading