பாராளுமன்ற உறுப்பினர்களின் நாடகம் இன்று அம்பலமானது: சுமந்திரன்

கொழும்பு, மே 05 “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய“ என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65 (இன்று இல்லாதவர்கள் +5 பேர் இருக்கலாம்). “அதிருப்தியாளர்களின்” நாடகம் இன்று அம்பலமானது.

Continue Reading

148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர்: சாணக்கியன்

கொழும்பு, மே 05 நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போகும் […]

Continue Reading

96 வீதமானோர் ஜனாதிபதி, பிரதமரின் பதவி விலகலை விரும்புகின்றனர்

கொழும்பு, மே 05 ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என 96 வீதமானவர்கள் விரும்புவதாக டெய்லி மிரரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றதை ஏற்று ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமா மட்டுப்படுத்தப்பட்ட நிபுணர்கள் அமைச்சரவையை ஏற்படுத்த […]

Continue Reading

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள புதிய தீர்மானம்

கொழும்பு, மே 05 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பான அறிவித்தலை பாராளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த விமானக் கொள்வனவுகளை மேற்கொள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட பலரும் கோரிக்கையை விடுத்து வந்தனர் இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

Continue Reading

இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித்

கொழும்பு, மே 05 பாராளுமன்றத்தில் தற்​போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர். இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார். அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சஜித்தை பார்த்து கையை அசைத்து காண்பித்துள்ளார். அதேபோல, எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என குறிப்பிட்டது தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

Continue Reading

டீசல் தட்டுப்பாடு: காஞ்சன விஜேசேகர

கொழும்பு, மே 05 இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன்  டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1000- 1500 மெற்றிக் டன் டீசல் மட்டுமே வெளியிடப்படுவதாக தெரிவித்தார். மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்றார்.  அடுத்த டீசல் ஏற்றுமதி மே 11 ஆம் திகதி  வரும் […]

Continue Reading

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பு, மே 05 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1,102 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 17,405 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 8,936 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. […]

Continue Reading

27 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கொழும்பு, மே 05 கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (05), 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்த மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையை பதவி விலகுமாறு வலியுறுத்தி […]

Continue Reading

இடைக்கால அரசாங்கமானது “புதிய போத்தலில் பழைய சாராயம்” போன்றது

கொழும்பு, மே 05 அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் இல்லை எனவும், அவ்வாறு இடம்பெற்றால் அது “புதிய போத்தலில் பழைய சாராயம்” போன்றாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமரை நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் இதனை செய்ய முடியாதது. ஏனெனில் ஜோன்ஸ்டன், மஹிந்தானந்தவை ஜனாதிபதி, பிரதமராக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனவும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற […]

Continue Reading

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

கொழும்பு, மே 05 கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

Continue Reading

நிதி மற்றும் நீதி அமைச்சருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

கொழும்பு, மே 05 நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அவர் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகளுக்கு மேலதிகமாக அவருக்கு, […]

Continue Reading