சமையல் கற்கைகளுக்கு தனியான பாடசாலை: ஜனாதிபதி ரணில்

கொழும்பு,ஜுன் 10 நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (09) ஆரம்பமான (Culinary Art Food Expo 2023) சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சி […]

Continue Reading

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பு

பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு செக்-இன் கவுண்டர்கள் நிறுவவும் 8 மாதங்களின் பின்னர் வருகை முனையத்திலும் இரண்டு கவுண்டர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவுத் துறையும், விமான நிலைய மற்றும் ஏவியேஷன் செர்வீசஸ் நிறுவனமும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும்.சிங்கப்பூர் நிறுவனமான தேல்ஸ் டிஸ் தயாரித்த […]

Continue Reading

சீமெந்து விலையை குறைப்பதால் கட்டட நிர்மாணத்துறையை கட்டியெழுப்ப முடியாது: கட்டட நிர்மாணத்துறை சங்கம்

சீமெந்து விலையைக் குறைப்பதன் மூலம் மாத்திரம், கட்டட நிர்மாணத்துறையைக் கட்டியெழுப்ப முடியாது என இலங்கை கட்டட நிர்மாணத்துறை சங்கம் தெரிவித்துள்ளது. ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றதன் இலாபத்தை, பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க, நுகர்வோர் விவகார அதிகார சபை இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் எம்.டீ.போல் தெரிவித்துள்ளார்.விலையை எவ்வாறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானிக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வந்தால், நிர்மாணத்துறையை […]

Continue Reading

நாட்டின் எந்தவொரு தேர்தலுக்கும் எமது கட்சி தயார்: மஹிந்த

கொழும்பு,ஜுன் 10 எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கும் கூட நாங்கள் தயார் என அவா் தொிவித்துள்ளாா். இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார். நாங்கள் […]

Continue Reading

முதலாம் தர மாணவர்களின் அனுமதியில் புதிய விதிமுறைகள்

அடுத்த வருடம் (2024) முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை (12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சிறுவர்களை முதலாம் தரத்தில் சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இவ்வருட சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த சிறுவர்களுக்கு மூன்று வீதத்தை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்ட போதிலும், குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்காமல் அவ்வாறான சிறுவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றறிக்கையில் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். அமைச்சரவையின் அங்கீகாரம் […]

Continue Reading

2023 வாக்காளர்: மாவட்ட ரீதியில் எம். பிகளின் எண்ணிக்கையை வெளியிட்டது ஆணைக்குழு

இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு, அந்த எண்ணிக்கை 19 ஆகும்.திருகோணமலை மாவட்டத்தில் மிகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், அந்த எண்ணிக்கை நான்கு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹாவிலிருந்து 18 பேரும், களுத்துறையில் இருந்து 10 பேரும், கண்டியில் இருந்து […]

Continue Reading

எரிபொருள் வரிசைக்கு இதுதான் காரணம்; அமைச்சர் கஞ்சன

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்த வாரம் எரிபொருள் வரிசை காணப்பட்டமைக்கான காரணத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். கடந்த வாரம், 255 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் […]

Continue Reading

பல பொருட்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு

கொழும்பு,ஜுன் 10 ஜுன் 09 ஆம் திகதி 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள், மின்சாரப் பொருட்கள் போன்றவை உட்பட HS கோட் 286 இன் கீழ் 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading

100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைக்கு வாய்ப்பு

கொழும்பு,ஜுன் 10 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Continue Reading

மாவட்ட ரீதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளியானது

இந்த ஆண்டு வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு, அந்த எண்ணிக்கை 19 ஆகும்.திருகோணமலை மாவட்டத்தில் மிகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், அந்த எண்ணிக்கை நான்கு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹாவிலிருந்து 18 பேரும், களுத்துறையில் இருந்து 10 பேரும், கண்டியில் இருந்து […]

Continue Reading

மாநகர சபைக்கு பெரும் தொகை பணத்தை நிலுவை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள்

கொழும்பு மாநகர சபைக்குள் வாகன தரிப்பிடங்களை நடத்தும் 38 தனியார் நிறுவனங்கள் கொழும்பு மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு கூடிய போது, ​​2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 265.5 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது. கொழும்பு மாநகரசபையின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தலைமையில் கூடிய […]

Continue Reading

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது: அரசாங்கம் உறுதி

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் […]

Continue Reading