வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மீட்பதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். அதேபோல், சேதமடைந்த அனைத்து நீர்ப்பாசன வசதிகளையும் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் […]

Continue Reading

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை (30) காலை 6 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து எலிஹவுஸ் வரை நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயில் அவசர மற்றும் அத்தியாவசிய திருத்தப் […]

Continue Reading

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவாகவே இருண்ட காலநிலை நிலவுவதாக ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் அஜித் குணவர்தன தெரிவித்தார். இந் நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருப்பதாகவும் ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால், நாட்டின் பல பகுதிகளில் […]

Continue Reading

வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில நாட்களில் ஒப்புதல் அளிக்கும் என அதன் தலைவர் இந்தியா சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களின் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் என்று அவர் […]

Continue Reading

ஊழல், மோசடிகளை பயமின்றி நேரடியாக எங்களிடம் முறையிடுங்கள் – புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்

நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் குறித்து பயமின்றி நேரடியாக தங்களிடம் முறையிடுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டடுத்தொகுதி அதிகார சபையின் செயற்பாடுகளை கண்காணிக்க வியாழனன்று சென்றிருந்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சருடன் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுகத் திலகரத்ன, பிரதி இளைஞர் விவகார அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் சுனில் குமார கமகே, ‘அரசியல், கட்சி வேறுபாடு, […]

Continue Reading

உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04 ஆம் திகதியிலிருந்து பரீட்சைகள மீள ஆரம்பமாகும் என அறிவித்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாட்களுக்குரிய பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Continue Reading

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று ஒலி எழுந்துள்ளது. அதனைகேட்ட கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமி வருகின்றதோ என அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அது வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அதனாலேயே ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் தேவையில்லை எனவும், ஏதாவது […]

Continue Reading

சம்பளம் வாங்கமாட்டோம் என்று உறுதியளிக்கவில்லை – NPP எம்பி லக்மாலி ஹேமச்சந்திர

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி குறிப்பிட்ட உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். எம்.பி.க்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருப்பதாகவும், அவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும், […]

Continue Reading

திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு! பிரதி அமைச்சர் டி.பி.சரத்

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். வீட்டு வசதி இல்லாததால் திருமணங்களை தள்ளிப் போட அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். சிறந்த திருமணம் வயது 24-30 வயது, அதற்குள் திருமணம் நடைபெற வேண்டும் என்றும், அந்த வயது இடைவெளிக்குள் திருமணம் நடக்கும் போது, ​​அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது அரசின் பொறுப்பாகக் கருதப்படும் என்றும் பிரதியமைச்சர் கூறுகிறார். […]

Continue Reading

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 மணி வரையிலான புதுப்பிப்பின் படி, மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,071 குடும்பங்களைச் சேர்ந்த 441,373 பேர் பாதிக்கப்பட்டனர். 19 பேர் காயமடைந்தும், ஒருவர் காணாமலும் போயுள்ளனர். மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி 99 வீடுகளும், 2,082 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. […]

Continue Reading

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருக்க வேண்டும் என்றும்ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார் அத்துடன் பாதகமான காலநிலை காரணமாக வடக்கு மற்றும் எல்லைகளுக்கு இடையேயான […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்கள்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு , இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நாள்தோறும் சுகாதார சேவைகள், யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்படும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து, யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மற்றும் யாழ் ஒஸ்மானிய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னுரிமையுடன் […]

Continue Reading