8000 பேருக்கு அடுத்த வாரம் ஆசிரியர் நியமனம்: அரவிந்த்குமார்

கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. கல்வி இராஜாங்க அமச்சர் ஏ. அரவிந்த்குமார் இந்தத்தகவலை வழங்கியுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும். மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களது நியமனங்கள், அந்தந்த மாகாணங்களில் வழங்கப்படும்.

Continue Reading

கோழி-முட்டை விலைகளை குறைக்க திட்டம்

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையின் உடன்படிக்கையுடன் கூடிய யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையை விதிப்பது குறித்தும், தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் கடுமையான விதிகளின் அடிப்படையில் கோழி இறைச்சி விலை உயர்வை தடுக்க நடவடிக்கை […]

Continue Reading

மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட்: ஜூன் 16ம் வரை நீடிப்பு

கொழும்பு,ஜுன் 09 பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

கடன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பு!

அதிக கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கான, விரைவான கடன் மறுசீரமைப்பு விடயங்களில், முன்னேற்றத்தை அடையமுடியும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள, உலக இறையாண்மைக் கடன் வட்டமேசை கூட்டத் தொடரின்போது இதனை தாம் எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 20 முக்கிய பொருளாதார நாடுகள் குழுவின், தொழில்நுட்ப குழு சந்திப்பு இன்று இடம்பெறுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அந்தக் குழுவுக்கு தற்போது தலைமை வகிக்கும் இந்தியாவினால், […]

Continue Reading

தங்கல்ல பிரதேச பயனாளிகளுக்கு மண்ணெண்ணைக்கான விநியோக அட்டைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ்

தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருநாள் படகு உரிமையாளர்களுக்கு சீன அரசினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவியாக வழங்கப்பட்ட மண்ணெண்ணையை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பயனாளிகளுக்கு மண்ணெண்ணைக்கான விநியோக அட்டைகளை வழங்கி வைத்தனர். மேலும் தங்கல்ல பிரதேசத்தின் மீன்பிடித்துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று விஜயம் செய்தார். அங்கு துறைமுகப்பகுதிக்குள் படகுகளைச் செழுத்துவதற்கு தடையை ஏற்படுத்தும் பாரிய கல்லை அகற்றி அல்லது உடைத்து விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை […]

Continue Reading

அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது: ஜனாதிபதி

கொழும்பு,ஜுன் 09 ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் […]

Continue Reading

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்- கிளிநொச்சி காணிகளை விடுவிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் போன்ற திணைக்களங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் கணிசமானவற்றை விரைவில் விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் நேற்று (08) நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாச்சி மற்றும் குறித்த அமைச்சு அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு அவசியமாகவுள்ள உணவுப் பாதுகாப்பு, போஷாக்கு மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றை உயர்த்துவதற்கு வனப் பாதுகாப்பு […]

Continue Reading

கடற்றொழிலாளர்களுக்காக அதிகாரிகளா?அதிகாரிகளுக்காக கடற்றொழிலாளர்களா?: அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் கேள்வி

கடற்றொழிலாளர்களுக்காக அதிகாரிகளா?அதிகாரிகளுக்காக கடற்றொழிலாளர்களா? என்று அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பினார். கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் படகுகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு படகு உரிமையாளர்கள் காலையிலேயே காத்திருந்தாலும் எண்ணையை நிரப்பும் உத்தியோகத்தர்கள் தாமதமாகவே கடமைக்கு வருவதால் தாம் நீண்ட நேரம் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலைமை தொடர்வதாகவும் அதனால் தாம் தொழிலுக்குச் செல்வதும் தாமதப்படுவதாகவும் அமைச்சரிடம் முறையிட்டனர்.அதுதொடர்பாகஅதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Continue Reading

உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை !

20,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (10) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 11,250 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வருமென விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரம் முழுமையாகக் கிடைக்குமெனவும் சிறுபோகத்திற்கு தேவையான அடிக்கட்டு பசளை கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தட்டுப்பாடின்றி உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உர கொள்வனவிற்காக […]

Continue Reading

கொழும்பு துறைமுக நகரம் சீனா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துகிறது: பிரதமர்

கொழும்பு துறைமுக நகரம் சீனா – இலங்கை உறவுகளை பலப்படுத்துகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சீனாவின் CGTN உடன் பேசிய பிரதமர், கொழும்பு துறைமுக நகரம் ஒரு பாரிய முதலீட்டு வலயமாக இருக்கும், ஏனெனில் இது நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் சர்வதேச சமூகத்துடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் உதவும் என தெரிவித்துள்ளார். “கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி என்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும், இதற்காக சீனா இலங்கைக்கு ஆதரவாக முன்முயற்சி எடுத்துள்ளது. கொழும்பு இலங்கையின் தலைநகரம். […]

Continue Reading

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பம்!

கொழும்பு,ஜுன் 09 அடுத்த பாடசாலை தவணை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

தங்கல்ல பிரதேசத்தின் மீன்பிடித்துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

தங்கல்ல பிரதேசத்தின் மீன்பிடித்துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று விஜயம் செய்தார். அங்கு துறைமுகப்பகுதிக்குள் படகுகளைச் செழுத்துவதற்கு தடையை ஏற்படுத்தும் பாரிய கல்லை அகற்றி அல்லது உடைத்து விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த தொழிலாளர்கள் தமக்கு மண்ணெண்ணை கிடைப்பதில் காணப்படும் தாமதத்தை விரைவு படுத்தித் தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் துறைமுகத்தில் உள்ளே இருக்கும் கட்டிடத்தின் கூரை பெரிதும் பழுதடைந்து கிடப்பதாகவும் அதையும் புனரமைத்துதருமாறும் கேட்டுக்கொண்டனர்.

Continue Reading