தொடர்ந்தும் ஏமாற முடியாது! ஜனாதிபதியுடனான பேச்சில் சம்பந்தன்

‘நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் வேண்டுகோளின் […]

Continue Reading

குரங்கு காய்ச்சல் பற்றி சுகாதார துறையின் அறிவிப்பு

குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.

Continue Reading

ஊழல் எதிர்ப்புச் சட்டம் 21ம் திகதி விவாதத்திற்கு

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. நாட்டில் ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இந்த சட்டமூலத்தினை அரசு தாக்கல் செய்ததன் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த சட்டமூலத்தில் உள்ள சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் […]

Continue Reading

கையடக்கத் தொலைபேசிகளது விலை குறித்து தீர்மானம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி அல்லது சாதனங்களை வழங்க முடியாது என சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், முன்னர் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அடிப்படை கையடக்கத் தொலைபேசியானது, தற்போதும் 4,500 ரூபா என்ற வரம்பில் உள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் பாரியளவிலான இறக்குமதியாளர்களுக்கு […]

Continue Reading

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழன்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களமிறங்கவுள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையர் பிறப்படமாகக் கொண்ட சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து இராஜினாமா செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார். அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் […]

Continue Reading

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடமேல் மாகாணத்திலும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை – கல்வி அமைச்சர்

நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும் ஆசிரியர் சேவையின் பிரகாரமே இடம்பெறும். அதிபர்களுக்கான சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான , கேள்வி நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன், நாட்டில் கடமயாற்றும் பதில் அதிபர்கள் தொடர்பில் […]

Continue Reading

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்கு மரணபயத்தை காண்பித்த யானை

பொலனறுவ தேசிய பூங்காவிற்கு சென்ற வெளிநாட்டுசுற்றுலாப்பயணிகள் ஆக்ரோசமான யானையொன்றை எதிர்கொண்டு மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றில் பயணம் செய்த சுற்றுலாப்பயணிகளே யானையை அருகில் எதிர்கொண்டுள்ளனர். யானையால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல் சுற்றுலாப்பயணிகள் அதற்கு அருகில் சென்று படம் பிடிக்க முயல்வதையும் தீடிரென சீற்றமடைந்த யானை அவர்களை நோக்கி வேகமாக வருவதையும் முச்சக்கர வண்டிகளை தலைகீழாக புரட்டிப்போடுவதையும் வெளியாகியுள்ள வீடியோக்கள் காண்பித்துள்ளன. முச்சக்கரவண்டியொன்றிற்குள் இருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

Continue Reading

வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: சுசில்

கொழும்பு,ஜுன் 08 தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன் இந்த வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு பிராந்தியத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Continue Reading

நாட்டில் அதிக விலைக்கு முட்டை விற்பனை!

நாடளாவிய ரீதியில் பல வியாபாரிகள் தொடர்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நாளில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர். அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் ஆணையம் நடத்திய விசாரணையில், அதிக விலைக்கு முட்டை விற்கும் வியாபாரிகளை கண்டறிய […]

Continue Reading

சூறாவளிக்கு முன் ஆயத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்புரை

அந்தமான் தீவுகளுக்கு அருகில் சூறாவளி அனர்த்தம் ஏற்படும் என்று காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் அப்பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் கடற்றொழிலாளர்கள் குறித்த அறிவுறுத்தலை கவனத்தில் எடுக்காமல் இருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரியப்படுத்தினார். சூறாவளி தாக்கம் ஏற்படுமிடத்து கடலில்படகுகளில் இருப்போருக்கு ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கடற்றொழிலாளர்கள் அந்தமான் தீவுகளுக்கு சென்று பாதுகாப்பாக […]

Continue Reading

எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க புதிய ஒப்பந்தம்

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம், ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc)  நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ் […]

Continue Reading