தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு பெரிய தந்தங்களையும் மற்றும் வயதான யானை என்பது இந்த விலங்கின் சிறப்பு அம்சமாகும். இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை தீக தந்து ஈர்த்தது.

Continue Reading

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றுள்ளது இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய […]

Continue Reading

இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிப்பு

பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யவும், மேலதிக புதிய அம்சங்களுடன் இந்த இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய இணையத்தளத்தில் இன்னும் பல புதிய விடயங்களை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

Continue Reading

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையும் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல் அதிகாரிகளுக்கான வெட்டுப் பரீட்சை (2016/24) ஒரே திகதிகளில் நடத்தப்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பான இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் […]

Continue Reading

வழமைக்கு திரும்பியது ஏ-9 வீதி!

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட யாழ்.ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்த நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்திருந்தது இன்னிலையில் இன்று ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Continue Reading

சீரற்ற வானிலையால் 12 பேர் பலி: 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் 99 ஆயிரத்து876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல் பேயுள்ளனர். இந்த அனர்த்தத்தில் […]

Continue Reading

உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கான […]

Continue Reading

எய்ட்ஸ் தொற்றாளர்கள் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கூறுகிறது. கடந்த ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளிகளில் 15 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என நிகழ்ச்சியின் இயக்குநர், சமூக சுகாதார நிபுணர் டாக்டர் விந்த்யா குமாரிபேலி தெரிவித்திருந்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் […]

Continue Reading

சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்கள் பாதிப்பு

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் தொடர்ந்தும் காணப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தந்துரு ஓயா மற்றும் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் […]

Continue Reading

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம் – இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Continue Reading

தெதுரு ஓயா நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நிக்கவெரட்டிய, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, பிங்கிரிய, வாரியபொல மற்றும் கொபேகனே ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, மோசமான வானிலை காரணமாக வடமாகாணத்தில் 64,000 ஹெக்டேயர் நெற்செய்கை நாசமாகியுள்ளது. அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் 23,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நெற்செய்கையும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் அதிகளவில் உயிர்மாய்ப்பு!

நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் 10 பேர் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன், குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். […]

Continue Reading