டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய வீரர்களின் ஐபிஎல் 2025 சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெருமளவு எதிரொலித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களை பல்வேறு அணிகளும் அதிக தொகை கொடுத்து வாங்கின. அந்த வகையில், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் சமீபத்திய ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எந்த தொகைக்கு எடுக்கப்பட்டனர் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இதுவரை […]

Continue Reading

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிவிப்பு

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை பாதுகாப்பான முறையில் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சிசிர பியசிறி தெரிவித்தார். இதேவேளை, ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

Continue Reading

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்கள் 3 பேர் கைது

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர். 2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 […]

Continue Reading

டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர்.   வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது […]

Continue Reading

இந்தோனேசியாவில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலி

ஜகார்த்தா:30 இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மேடான் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுற்றுலா பஸ் மீது மரங்கள், மண் மற்றும் பாறைகள் மூடப்பட்டன. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட […]

Continue Reading

சாதனை படைக்க வயது தடையல்ல: `புஷ்-அப்’ செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி

சாதனை படைக்க வயது தடையல்ல என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் மூதாட்டி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1,500 புஷ்-அப்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கனடாவை சேர்ந்தவர் டோனாஜீன் வையில்டின். 59 வயதான இவர் கடந்த வாரம் 60 நிமிடங்களில் 1,575 புஷ்-அப்களை முடித்து தனது 2-வது உலக சாதனையை படைத்துள்ளார். ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும், புஷ்-அப்பின் அடிப்பகுதியில் 90 டிகிரி முழங்கை வளைவு மற்றும் மேலே தள்ளும் போது முழு கை நீட்டிப்பு தேவை என்கிற […]

Continue Reading

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீன, ரஷிய ராணுவ விமானங்கள்

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின. முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் […]

Continue Reading

வான்கோழி கறி விருந்து.. விண்வெளியில் Thanks Giving கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தாங்க்ஸ் கிவ்விங் […]

Continue Reading

நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி […]

Continue Reading

இலங்கை சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் சிறந்த பலன்கள் – சீனத் தூதுவர்!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்தப்படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் ஊடக பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முக்கியமான இரண்டு தேர்தல்களின் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும், பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் சீனாவின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Continue Reading

இலங்கையின் சுகாதார, பொருளாதார முயற்சிகளை வரவேற்கும் ஜப்பானியத் தூதுவர்!

வீண் விரயம் மற்றும் ஊழல் அற்ற மக்கள் நலன் சார்ந்த சுகாதார சேவையை உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான இலங்கையின் முயற்சிகளை வரவேற்பதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இசோமாடா (Akio Isomata) இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுகாதார சேவையில் ஜப்பானின் ஆதரவின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் ஆரம்பச் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் […]

Continue Reading

இந்தியாவின் துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து!

இந்தியாவின் நாகை, கடலூர் துறைமுகங்களிலிருந்து மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குத் தமிழக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொழும்பு, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கடலூர், நாகை துறைமுகங்களிலிருந்து சரக்குகளைக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டு கடல்சார் அதிகார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இலங்கைக்கு விவசாய பொருட்கள், மீன்சார் பொருட்கள் மற்றும் […]

Continue Reading