இலங்கையின் முதலீடுசெய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்!

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோவுடன் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இதன்போது, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இலங்கையில் உள்ள முக்கிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை முதலீட்டாளர்கள் மேற்கொண்டனர். இதன்போது, மருத்துவ உபகரண உற்பத்தி, மருந்துவம், பயணம் மற்றும் சுற்றுலாத் […]

Continue Reading

சீன நகரை அலங்கரிக்கக்போகும் இலங்கையின் இரண்டு சிற்பங்கள்

வரலாற்றில் முதல் தடவையாக சீனாவின் செங்டு நகரை அழகுபடுத்த இலங்கை சிற்பி ஒருவரின் இரண்டு கலைப் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கான வடிவமைப்புகளை சமர்ப்பிக்க 26 நாடுகளைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களை சீனா அழைத்துள்ளது. இதில் செங்டு நகரை அழகுபடுத்த ஆறு வடிவமைப்பாளர்களின் 12 வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படைப்புகளில், இலங்கை சிற்பி லலித் சேனாநாயக்கவின் இரண்டு படைப்புகளும் அடங்கும். லலித் சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட குதிரை சிற்பமும், செங்டு இரண்டு சுதந்திர […]

Continue Reading

குவைட்டில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு எல் 230 என்ற விமானத்தில் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர் என கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். குவைட்டுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட இலங்கையர்கள் குவைட்டுக்கான இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கான தூதரகத்தின் நடவடிக்கையால் 48 இலங்கையர்களும் இன்று நாடு திரும்பியுள்ளனர். 38 பெண்களும் 10 […]

Continue Reading

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய நாளை கூடுகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை (22) மீண்டும் கூடவுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இந்த விசாரணை நடத்தப்பட்ட போதிலும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் இதில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பான விசாரணை நாளை காலை 10 மணிக்கு மனித உரிமைகள் […]

Continue Reading

கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு

நியாயமான சுமை-பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் (Wang Wenbin) இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி, கடன் பிரச்சினைகளை விரைவாகவும் திறம்படமாகவும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு நிதியுதவி […]

Continue Reading

உக்ரைனுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் – புமியோ கிஷிடா உறுதி

உக்ரைன் மீதான ரஷிய போர் ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை ஆயுதம் சப்ளை, பொருளாதார ஆதரவு உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தன. மேலும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டம் ஒன்றை சீனா அண்மையில் […]

Continue Reading

4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு!

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி, பொழுதுபோக்கு சேவை துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் செலவுகளை குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களின் வரிசையில் கடந்த மாதம் டிஸ்னி நிறுவனமும் இடம்பிடித்து இருந்தது. எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியாத காரணத்தால், தங்கள் ஊழியர்களில் 7 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க இருப்பதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 4 […]

Continue Reading

வாகடும் வறட்சி… கடந்த ஆண்டில் மட்டும் 43,000 பேர் உயிரிழப்பு! -அதிர்ச்சி தகவல்

சோமாலியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பொய்த்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால், பசி பட்டினி அதிகரித்து வருகிறது. தற்போது, 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. லண்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களில், 50 விழுக்காட்டினர் 5 வயதிற்கும் கீழ் உள்ள வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட மிக மோசமான பாதிப்பு என்றும், இந்த ஆண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் […]

Continue Reading

உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க – அமெரிக்க பத்திரிகை பாராட்டு

உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சி பா.ஜ.க. என வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற அமெரிக்கப் பத்திரிகையில் வால்டர் ரஸ்செல் மீட் என்பவர் எழுதிய கட்டுரை தெரிவிக்கின்றது. இக்கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.க. அமெரிக்காவின் தேசிய நலன்களின்படி பார்க்கும்போது, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது. எனினும், அக்கட்சி குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பா.ஜ.க. அடுத்து […]

Continue Reading

போர்க்குற்றங்களை தடுக்க புதினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீன அதிபருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். அங்கு அவர் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களிடையே மீண்டும் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனில் நடந்து வரும் போர்க்குற்றங்களை […]

Continue Reading

கனடா பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்

கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இயங்கியது. அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது மாணவன் ஒருவன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை குத்தினான். இதனால் பயந்து போன மாணவர்கள் கூச்சலிட்டு அங்கும், இங்குமாக ஓட ஆரம்பித்தனர். இதனையடுத்து அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர் வந்து மாணவனை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த மாணவன் கத்தியால் குத்தினான். […]

Continue Reading

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 2 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 […]

Continue Reading