சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்துகொண்ட இலங்கை வீரர்

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர மெல்போர்னில் ஆர்த்ரோஸ்கோபிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். பிரபல அவுஸ்திரேலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் மார்க் பிளாக்னியால் மேற்கொள்ளப்பட்ட அவரது சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார். இன்னும் 3 மாதங்களில் அவரை நடவடிக்கைக்குக் கொண்டு வருவோம் என நம்புகிறோம் என பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Continue Reading

டுவிட்டரை வாங்கியது ஏன்? எலான் மஸ்க் விளக்கம்

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து, டுவிட்டரை வாங்கப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் 44 பில்லியன் டாலருக்கு டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார். பின்னர் டுவிட்டரை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில் டுவிட்டரில் இருக்கும் போலி […]

Continue Reading

சிரிக்கும் சூரியன்! நாசா வெளியிட்ட புகைப்படம்

நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது. இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் […]

Continue Reading

உலகிலேயே உயரமான சிவன் சிலை திறப்பு

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், ‘விஸ்வஸ்ரூபம்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட சிவன் சிலை இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. 369 அடி உயரமுள்ள இது, உலகிலேயே உயரமான சிவன் சிலையாக கருதப்படுகிறது. ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ. தொலைவில், ஒரு குன்றின் மீது இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தத் பதம் சன்ஸ்தான் என்ற அமைப்பு இந்த சிலையை அமைத்திருக்கிறது. தியானநிலை தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிவன் சிலையை 20 கிலோமீட்டர் […]

Continue Reading

நியூஸிலாந்து நாணய சுழற்சியில் வெற்றி!

இருபதுக்கு 20 உலக்கிண்ணத் தொடரில் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணியில் தலைவர் கென் வில்லியம்ஸன் முதலில் துடுப்பாடத் தீர்மானித்துள்ளார். இதேவேளை, உலகக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டிகள் மழையால் தடைப்பட்ட போதிலும், சிட்னி மைதானத்தைச் சுற்றியுள்ள வானிலை இன்று நல்ல நிலையில் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி உள்ளூர் நேரப்படி இன்று […]

Continue Reading

அமெரிக்கா புறப்பட்டார் ரஞ்ஜன் ராமநாயக்க!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். இன்று அதிகாலை 03.50 மணியளவில் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டாரின் – டோஹா நோக்கி பயணித்ததாக விமான நிலைய குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டாரிலிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா நோக்கி ரஞ்ஜன் ராமநாயக்க செல்ல உள்ளார். நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தடை நீக்கப்பட்டதையடுத்தே, அவர் அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். அமெரிக்காவில் சுமார் […]

Continue Reading

ஈரான் அமைப்புக்கு அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், ஒக் 29 பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற நூலை எழுதியதற்காக அச்சுறுத்தலுக்கிடையே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மீது ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அதில், சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்தார். ஒரு கையின் செயல்பாட்டை இழந்தார். இதற்கிடையே, சல்மான் ருஷ்டியை கொலை செய்பவருக்கு பல கோடி டாலர் பரிசாக வழங்கப்படும் என்று ஈரான் நாட்டைச் […]

Continue Reading

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து-இலங்கை இன்று மோதல்

சிட்னி, ஒக் 29 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் […]

Continue Reading

பிலிப்பைன்சை பந்தாடிய ‘நால்கே’ புயல்: 31 பேர் உயிரிழப்பு

மணிலா, ஒக் 29 தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை ‘நால்கே’ என்கிற சக்தி […]

Continue Reading

அடுத்த இரண்டு படம் லைக்காவிற்கு தான்: உறுதி செய்த ரஜினி

இந்தியா,ஒக் 28 நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இரண்டு […]

Continue Reading

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் படக்குழு: குஷியில் ரசிகர்கள்

இந்தியா,ஒக் 28 மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் […]

Continue Reading