மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

சியோல்,ஒக் 28 உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது. இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் பரிசோதனை

இந்தியா,ஒக் 28 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராசா

பெர்த், ஒக் 28 ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது. இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பந்து வீச்சில் […]

Continue Reading

இலங்கை அணி தொடர்பில் மஹேல ஜயவர்தனவின் நிலைப்பாடு

கொழும்பு,ஒக் 28 உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதித் தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் முழுமையான திறமையுடன் இருப்பார்கள் என தான் நம்புவதாக அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவிக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டிகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கான புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார். உலகக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளின் முதலாவது போட்டியில் இலங்கை அணி […]

Continue Reading

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு?

சான் பிரான்சிஸ்கோ, ஒக் 28 உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை இன்று அதிகாரபூர்வமாக கையகப்படுத்தினார். மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார். குறிப்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி […]

Continue Reading

பிலிப்பைன்சில் வெள்ளம், மண்சரிவில் சிக்குண்டு 13 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்சில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு பிலிப்பைன்சின பல பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்தும் நிறுவனத்தை வாங்கிய திருநங்கை!

மிஸ் யுனிவர்ஸ் என்ற பிரபஞ்ச அழகி போட்டிகளை நடத்தும் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு தாய்லாந்து பிரபல ஊடக அதிபரும் திருநங்கையுமான ஜகாபோங் வாங்கி உள்ளார். தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கும் ஜேகேஎன் குளோப ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்ப் இதில் பங்குதாரராக இருந்தார். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டுமே முன்பு போட்டியிட அனுமதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் பட்டத்துக்காக போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

தேநீர் பருகிய ஐவருக்கு நேர்ந்த நிலை!

தேயிலை துாள் என்று கருதி பூச்சிக்கொல்லி மருந்தில் தயாரிக்கப்பட்ட தேனீரை பருகியமை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் ஒரு வீட்டின் மூவர் மற்றும் அயலவர்கள் என்று ஐந்து பேர் மரணமாகினர். நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியே தவறுதலாக தேயிலை துாள் என்ற கருதி தேனீர் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. வீட்டின் பெண் தயாரித்த இந்த தேனீரால், வீட்டில் உள்ள மூவர் மற்றும் அயலர்கள் இருவர் மரணமாகியுள்ளனர். எனினும் இந்த […]

Continue Reading

டுவிட்டரை வாங்கினார் எலான் மஸ்க்: பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை என்று டுவீட்!

சான் பிரான்சிஸ்கோ,ஒக் 28 உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தினார் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க். முன்னதாக, டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக […]

Continue Reading

அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது!

ரி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான குரூப் 1 சூப்பர் 12 சுற்று போட்டி மெல்போர்னில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

Continue Reading

இந்தியாவின் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியில் யோஹானி!

இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா இந்தியாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கபில் ஷர்மா’வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். கடந்த ‘தீபாவளி’ அன்று ‘கபில் சர்மா’ நிகழ்ச்சிக்காக பல பிரபலமான பாடும் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிதியாக யோஹானி கலந்துக்கொண்டமை தனக்கு மிகுந்த மகிழச்சி என தனது முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

இலங்கை வீரர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை

ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரி20 உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை காலை அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற உள்ளது.

Continue Reading