நயினாதீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நயினாதீவுக்கு சென்றிருந்தார். நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள போதிலும், நயினாதீவு நாகவிகாரைக்கு இதுவரை விஜயம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், விகாராதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்றைய தினம் ஜனாதிபதி நயினாதீவு நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு இடைக்கால தடையுத்தவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நீதிமன்றத்தில் மே மாதம் 4ஆம் திகதி தகவலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கட்டாரின் அறிவுறுத்தல் தொடர்பில் இலங்கையின் தெளிவூட்டல்

கட்டார் அரசாங்கத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வெளவிவகார அமைச்சின் செயலாளருக்கு விடயங்களை கடிதமொன்றின் மூலம் தெளிவூட்டியுள்ளார். இலங்கைக்குள் ஏ.எச்1.என்1 வைரஸ் பரவுகின்றமையானது, அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும், ஏ.எச்1.என்1 வைரஸ் உலக நாடுகளில் பரவும் சாதாரண நோய் எனலும் சுகாதார அமைச்சின் செயலாளர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்குள் தற்போது ஏ.எச்1.என்1 […]

Continue Reading

டிப்பர் சாரதிகள் போராட்டம்

வவுனியாவிலுள்ள எமது கனிய வளங்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்க வேண்டாமெனக்கோரி டிப்பர் சாரதிகள் போராட்ட பேரணியை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேரணி இன்று வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மகஜர் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவடைந்துள்ளது. அதில், எமது பகுதிகளிலுள்ள கனிய வளங்களான கிரவல் அகழும் இடத்தினை பெரும்பான்மை தனியார் இனத்தவருக்கு கொடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் இங்குள்ள டிப்பர் சாரதிகள், […]

Continue Reading

இலங்கையை அருகில் வந்து பார்வையிடவுள்ள சூரியன்

இலங்கைக்கு மேல் அண்மித்து சூரியன் தென்படவுள்ளதால் பல பாகங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பாகங்களிலும் 34 பாகை செல்சியஸிற்கும் அதிகரித்த வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நண்பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவதைத் தவிர்த்துக் கொள்வதுடன், தண்ணீர் அருந்தும் பழக்கத்தை அதிகப்படுத்தி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் மூடப்பட்டது – காரணம் இதுதான்

தொற்றுநோய் பரவும் நிலை காணப்படுவதால், பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவறையறையின்றி மூடப்பட்டுள்ளன. இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களையும் நாளை (04) நள்ளிரவுக்கு முன்னர் வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

வடமாகாண அவைத்தலைவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவைத் தலைவர் சபைக்கு வருகை தராத காரணத்தினால் சபை அமர்வு திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

கல்வியுரிமை கோரி யாழ். பல்கலையில் உண்ணாவிரத போராட்டம்

வகுப்புத்தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் . பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்றையதினம் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஈழத்தமிழர்களுக்கான ரஜனியின் பிறிதொரு கடிதம்

வவுனியாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக லைக்கா நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சூழலில், ஈழத் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டுமொரு கடிதத்தை தமிழ் திரைப்பட பிரபல நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ளார். இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கென வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட பிரபல நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறானதொரு சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தமிழக […]

Continue Reading

நாயாறு களப்பில் சட்டவிரோத மீன்பிடி அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சர் உத்தரவு

நாயாறு களப்புப் பகுதியில் 23 படகுகளுக்கும் நிர்வாகங்களுக்குத் தெரியாமல் வழங்கப்பட்ட ஏனைய அனுமதிகளையும் உடனடியாக இரத்து செய்யுமாறு மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று உத்தரவிட்டுள்ளார்.. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறுப் பகுதிகளில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மீனவர்களை விடவும் அதிகமான தென்னிலங்கை மீனவர்கள் தொழில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமானோருக்கு மாவட்ட அனுமதிகள் இன்று மத்திய கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் தொழில் மேற்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வின்றித் தொடரும் […]

Continue Reading

முகமூடிக் கொள்ளையர்கள் யாழில் அட்டகாசம்!

முகத்தில் கறுப்புதுணி கட்டி வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு 25 பவுண் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். யாழ். கச்சேரி காட்டுக்கந்தோர் வீதியில் இன்று வியாழக்கிழமை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை நேரம், வீட்டு கதவினை உடைத்து உள்நுழைந்த 03 கொள்ளையர்கள் முகங்களை கறுப்பு துணியால் கட்டிவிட்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வீட்டு அலுமாரியில் இருந்த சுமார் 13 லட்சம் மதிக்கத்தக்க 25 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் […]

Continue Reading

உறவுகளைத்தேடி தொடரும் போராட்டம்!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 28ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தமக்கான உரிய தீர்வினை வழங்கக்கோரி, வவுனியா மத்திய தபால் அலுவலகத்திற்கு அருகே இன்று (23) தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறும் கோரியே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading