கனடாவில் காட்டுத்தீ: 45 ஆயிரம் ஏக்கர் தீக்கிரை

கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. இந்த வருடத்தில் தற்போது வரை 2405 முறை தீப்பிடித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 431 இடங்களில் தீப்பிடித்திருந்தது. நேற்று அது 422 ஆக குறைந்துள்ளது. இருந்தாலும் புதிதாக 10 இடங்களில் தீப்பிடித்துள்ளது. கனடாவின் மேற்கு பகுதியில் நிலையற்ற சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. வெப்பநிலை மற்றும் வெப்பக்காற்று வீசுவதால் மோசமான காட்டுத்தீயை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் 45 ஆயிரம் […]

Continue Reading

தற்கொலைக்கு தடைவிதித்த கிம் ஜாங் “தேச துரோக குற்றமாக அறிவிப்பு”

சியோல்,ஜுன்10 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்துள்ளார். தற்கொலையை தேசத்துரோகக் குற்றமாகக் கருதி கிம் ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிம் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்கொலைகளை தடுக்க உத்தரவிட்டுள்ளார். நாடு கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை […]

Continue Reading

துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமி கடத்தல்; மதம் மாற்றி திருமணம் செய்த ஆசிரியர்

பாகிஸ்தான் நாட்டின் சிந்த் மாகாணத்தில் வசித்து வருபவர் திலீப் குமார். இவரது மகள் சுஹானா (வயது 14). இந்நிலையில், திலீப் போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.அதில், அக்தர் கபோல், பைசான் ஜாட் மற்றும் சாரங் கஸ்கேலி ஆகிய 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரது மகள் சுஹானாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று விட்டனர் என தெரிவித்து உள்ளார்.எனினும், சுஹானா மதம் மாறி, அவரது விருப்பத்தின் பேரிலேயே திருமணம் […]

Continue Reading

கொலம்பியாவில் விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்

பொகட்டா, ஜுன் 10 கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார். இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் […]

Continue Reading

அமெரிக்க ஜனாதிபதி- இங்கிலாந்து பிரதமர் இடையே முக்கிய சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரிஷி சுனக் பிரதமரான பின்னர் மேற்கொள்ளும் 4-வது சந்திப்பு இதுவாகும். சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்வதாக இருவரும் உறுதி அளித்தனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியதில் இந்த இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. மேலும் உக்ரைன் இராணுவத்தினருக்கு போர்ப் பயிற்சியையும் இவர்கள் […]

Continue Reading

ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பால் சர்வதேச அரசியலில் பரபரப்பு

பெலாரஸ் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பால் சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டைய நாடான பெலாரஸ் ஜனாதிபதியுடன், ரஷ்ய ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத ஆரம்பத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் […]

Continue Reading

உலகக் கிண்ண தகுதி சுற்று போட்டிக்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணி

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாப்வே நோக்கி பயணித்துள்ளது. அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான சேவையின் EK-649 ரக விமானத்தில் துபாய் சென்றுள்ள இலங்கை அணி, அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில், சிம்பாப்வே செல்லவுள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அங்கு இலங்கை அணி முதலில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு கிரிக்கட் அணிகளுடன் […]

Continue Reading

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.25 கோடியாக உயர்வு

வாஷிங்டன்,ஜுன் 10 சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர், 228 நாடுகளின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், ஊரடங்கு, கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்புகள் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 69 […]

Continue Reading

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. அவர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக […]

Continue Reading

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற சென்னை புதுமண தம்பதி பலியான சோகம்

சென்னை, ஜுன் 10 சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் […]

Continue Reading

ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷியா

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது. தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. […]

Continue Reading

‘கோர்ட்டு மூலமாக என்னை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது’ – இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்,ஜுன் 10 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 9-ந் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வந்தபோது இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இம்ரான்கானின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது ராணுவ கோர்ட்டு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் சூளுரைத்துள்ளது. […]

Continue Reading