தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் உங்கள் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது. டிசம்பர் 15, 2024க்குப் பிறகு, தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது, மேலும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் […]

Continue Reading

புதிய பாராளுமன்றத்தில் இலங்கை – சீன நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க ஆராய்வு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர்) ஸாவோ லெஜியின் (Zhao Leji) வாழ்த்துக்களை இதன்போது சீனத் தூதுவர் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கௌரவ கலாநிதி அசோக ரன்வலவிடம் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால […]

Continue Reading

20 தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் அனுசரணை நாடாக இலங்கை இணைவு

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது. இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்ள இலங்கைக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய […]

Continue Reading

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” கைது

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “பெட்டி மல்லி” என்பவர் பயாகல பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயாகல, கொஸ்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 03 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த சில […]

Continue Reading

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை அதிகரிக்கும் மூடிஸ்

இலங்கையின் கடன் தர மதிப்பீட்டை “Ca” இலிருந்து அதிகரிக்க மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச பத்திர மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்காக அரசாங்கத்தின் பத்திரப் பரிமாற்ற சலுகையைத் தொடர்ந்து, மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் இலங்கைக்கான தர மதிப்பீட்டை உயர்த்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கப்பட்ட பத்திரப் பரிமாற்றம், 12.55 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் முக்கியமானதாகும். மேலும் மூடிஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் […]

Continue Reading

முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும் , முன்னாள் பிரதியமைச்சருமான சேகு இஸ்ஸதீன், சுகயீனமுற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்றில் காலமானார். வேதாந்தி என்று அனைவராலும் அறியப்பட்ட அவர் , இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமாவார்.

Continue Reading

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் லெபனான் மற்றும் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Continue Reading

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்

இலங்கையில் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது உப திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான 200 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் வணிகங்களுக்கு தேவையான நிதி வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் முதல் கடனாக, ஆசிய அபிவிருத்தி வங்கி 2023 டிசம்பரில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. இரண்டாவது உப திட்டம் தொடர்பான 200 மில்லியன் டொலர்கள் […]

Continue Reading

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை நாடு முழுவதிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாரெனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் […]

Continue Reading

அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக வை.எல்.மொஹமட் நவாவி நியமிக்கப்பட்டுள்ளார்

Continue Reading

அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குனராக இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:27 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். பணிவாக இருக்கிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அதனால் அவர்கள் மீண்டும் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். […]

Continue Reading

சி.எஸ்.கே. தீமில் ரெடியான விமானம்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14 முதல் மே 25 வரை நடக்கிறது. இதற்கான மெக ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன்மூலம் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்துள்ளனர். தமிழகத்தை மையமாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை அணியில் 3 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் […]

Continue Reading