உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

Continue Reading

அமெரிக்கா-இந்தியா இடையேயான நம்பிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் இல்லை: பைடன் அரசின் முக்கிய அதிகாரி

வாஷிங்டன்,ஜுன் 08 அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை மற்றும் உலகில் அமெரிக்காவின் பங்கு பற்றி அதிபர் பைடன் அரசின் முக்கிய அதிகாரியான குர்த் கேம்ப்பெல், ஹட்சன் மையத்தின் வால்டர் ரஸ்செல் மீத் என்பவருடன் விவாதம் மேற்கொண்டார். அப்போது வருகிற 22-ந்தேதி அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது பற்றி கேம்ப்பெல் கூறும்போது, உலக அரங்கில், அமெரிக்காவின் இருதரப்பு உறவில் இந்தியாவின் உறவானது அதிமுக்கியம் வாய்ந்தது. இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றிய தனது பணிக்கால அனுபவத்தில், இந்த உறவுமுறையில் நல்லெண்ணமும், நம்பிக்கையும் […]

Continue Reading

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி

இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.69 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.56 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Continue Reading

இந்திய சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்!

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் இன்று (8) காலை திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர். அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.

Continue Reading

மீதமுள்ள ஒரு குற்றச்சாட்டுக்காக விசாரணையை எதிர்கொள்ளும் தனுஷ்க!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்கான சிட்னி சென்றிருந்தபோது, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் மூன்று குற்றச்சாட்டுகளை மீள பெற்ற பிறகு, அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்டமை தொடர்பான ஒரு குற்றச்சாட்டை 32 வயதான தனுஷ்க எதிர்கொள்கிறார். மீதமுள்ள குற்றச்சாட்டில் தான் நிரபராதி என தெரிவித்து தனுஷ்க மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். எவ்வாறாயினும், அவர் விசாரணைக்கு […]

Continue Reading

மிக மோசமான வறுமையின் பிடியில் இலங்கை – 6 வீதமான பெற்றோர் அவர்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை!

இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை நான்கு முதல் ஏழு மில்லியனாக அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 2019 முதல் 2023 ம் ஆண்டிற்குள் நான்கு முதல் ஏழு மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் எண்ணிக்கை இந்த காலப்பகுதிக்குள் 31 வீதமாக அதிகரித்துள்ளது என்பதும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. லிர்னே ஏசியா என்ற பிராந்திய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. ஆய்விற்குட்படுத்தப்பட்ட 10,000 […]

Continue Reading

திருமணத்திற்கு சென்று திரும்பியபோது மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 25 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பஸ்ஸில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர். சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். […]

Continue Reading

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும் […]

Continue Reading

தகர்க்கப்பட்ட அணையில் இருந்து வெளியேறும் நீரால் நோய்கள் பரவும் அபாயம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் […]

Continue Reading

நிலத்தடி சுரங்கத்தில் தங்க அனுமதிக்கும் உலகின் மிக ஆழமான ஓட்டல்

இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்களை தூங்க அனுமதிக்கும் வகையில் உலகின் மிக ஆழமான ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீப் ஸ்லீப் ஓட்டல், வடக்கு வேல்ஸில் எரிரி தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்னோடோனியாவின் மலைகளுக்கு அடியில் அமைந்துள்ளது. டீப் ஸ்லீப் ஹோட்டலில் நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் மற்றும் இரட்டை படுக்கையுடன் கூடிய ரொமான்டிக் அறை உள்ளது. இது வாரத்தில் ஒரு […]

Continue Reading

அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

ரோம்,ஜுன் 08 கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 86 வயது போப் பிரான்சிஸ், குடல் அறுவை சிகிச்சைக்காக வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாடிகன் தேவாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக ஹெர்னியா பாதிப்பால் போப் பிரான்சிஸ் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு நீண்ட நாட்களுக்கு […]

Continue Reading

டிராவிஸ் ஹெட், ஸ்மித் அபாரம்: 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

லண்டன், ஜுன் 07 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் குவாஜா களமிறங்கினர். 10 பந்துகளை சந்தித்த குவாஜா ரன் எதுவும் எடுக்காமல் (0) சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த மார்னஸ் […]

Continue Reading