ரூ.2.4 கோடிக்கு ஏலம்: சுட்டி குழந்தை சாம் கரணை தட்டி தூக்கிய சென்னை அணி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் […]

Continue Reading

குட்டித் தூக்கம் போட்ட ஊழியர்.. பணிநீக்கம் செய்த நிறுவனம்: ரூ. 42 லட்சம் அபராதம்

ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார். நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு […]

Continue Reading

மெக்சிகோவில் சோகம்: மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

மெக்சிகோ சிட்டி,25 வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் சிலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை […]

Continue Reading

250 ராக்கெட்களை வீசி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு

பெய்ரூட்:25 இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் […]

Continue Reading

துருக்கியில் ரஷிய விமானம் தரையிறங்கிய போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

95 பேருடன் சென்ற ரஷிய விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என துருக்கி போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகோய் சூப்பர்ஜெட் 100 வகையை சேர்ந்த அஜிமுத் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் சோச்சியில் இருந்து 89 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியதும் […]

Continue Reading

ராணுவ வேலையை தவிர்க்க மானாவாரியாக சாப்பிட்டு கொழுத்த இளைஞர்: பிடித்து ஜெயிலில் போட்ட அரசு

தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். […]

Continue Reading

விபத்துக்குள்ளான சரக்கு விமானம்: ஒருவர் உயிரிழப்பு!

லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் விமான நிலையத்திற்கு அருகில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.  ஸ்பெயின் சரக்கு விமான நிறுவனமானதொன்றுக்குச் சொந்தமான போயிங் 737 எனும் விமானம் தரையிறங்குவதற்கு முற்பட்ட நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் லிதுவேனியா அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading

குவைட் சிறைச்சாலையில் இருந்து இலங்கை கைதிகள் நாட்டிற்கு வருகை!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர் குவைத் அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், அந்நாட்டின் அரசாங்கத்தால் இவர்கள், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் குவைத் நாட்டில், போதைப்பொருள் பாவனை, வர்த்தகம் மற்றும் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது […]

Continue Reading

295 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பெர்த் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் […]

Continue Reading

அதானியின் இலங்கை திட்டம் குறித்து அமெரிக்க நிறுவனம் உரிய கவனம்!

இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடன் செயல்படும் கொழும்பு, துறைமுக அபிவிருத்திக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவி வழங்க ஒப்புக்கொண்ட அமெரிக்க நிறுவனம், குறித்த திட்டத்தில் உரிய கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் நிறுவனத்தின் பிற உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற குறித்த அமெரிக்க நிறுவனம், கடன் தொடர்பான இறுதி உடன்பாட்டை எட்டவில்லை […]

Continue Reading

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை!

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடைபெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி […]

Continue Reading

வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ் இளைஞர்கள்: முகவர்களால் ஏமாற்றப்பட்டு எங்கே போனார்கள் தெரியுமா?

வெளிநாடு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் இருவர், முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரஸ்ய இராணுவத்தின் கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர். குருநகர் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே ரஸ்ய இராணுவ கூலிப்படையில் இணைக்கப்பட்டுள்ளனர். முகவர்கள் அவர்களை ஏமாற்றி ரஸ்ய இராணுவத்தின் வெளிநாட்டு கூலிப்படையில் இணைத்துள்ளதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading