ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக […]

Continue Reading

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: மகன் அமீன் விளக்கம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி சாயிராவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.  அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்திற்கு பிறகு அவரது இசை குழுவில் பணியாற்றி வரும் மோகினி டே என்பவரும் கணவரைப் பிரிவதாக அறிவித்தார்.  இந்த செய்தி வைரலான பிறகு ரஹ்மான் விவாகரத்துக்கு அந்த பெண் தான் காரணமா என இணையத்தில் பல சர்ச்சையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால் அந்த பெண்ணுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என சாயிராவின் வக்கீல் விளக்கம் கொடுத்தார்.  இதற்கு பல […]

Continue Reading

புதின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: உக்ரைனுக்கு வாரிக்கொடுத்து ரஷியாவை சீண்டும் ஸ்வீடன்

உக்ரைன் போர் ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார். இதனை பயன்படுத்தி அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் […]

Continue Reading

மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 10, 800 துருப்பினர்கள்!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு மேலதிகமாக 10, 800 துருப்பினரை இந்திய மத்திய அரசாங்கம் இன்று அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில், மியன்மாருடன் எல்லையைக் கொண்டுள்ள மணிப்பூரில் அதிக அளவிலான துருப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இனங்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் இடம்பெற்றுள்ளதன் காரணமாகவே மேலதிக துருப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார். இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள துருப்பினருடன் சேர்த்து, தற்போது மணிப்பூரில் மொத்தமாக 288 படையணிகள் நிலைகொண்டுள்ளன. கடந்த வருடம் மே […]

Continue Reading

விசேட அறிக்கை வௌியிடவுள்ள IMF பிரதிநிதிகள்!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிட உள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவில் உடன்பாட்டிற்கு வந்தமை தொடர்பில் இதன்போது அறிவிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் கடந்த தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் […]

Continue Reading

கனடாவில் இலங்கையர் ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை!

கனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  27 வயதான குறித்த நபர் தமது தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  உயிரிழந்தவரின் மனைவி அயலவர்களின் உதவியைக் கோரியதை அடுத்து அயலவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த நபர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் […]

Continue Reading

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்:22 பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த 2 முக்கிய கமாண்டர்கள் உள்பட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகிலிருந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 38 பேர் உயிரிழந்தனர் […]

Continue Reading

ஸ்மித்தை கோல்டன் டக் அவுட்டாக்கியது ரெண்டே பேருதான்

முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். […]

Continue Reading

இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது- மற்றொரு வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிரடி

இஸ்லாமாபாத்:22 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் பல வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றன. அந்த வகையில் அரசு கருவூலத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பான தோஷகானா வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் கடந்த […]

Continue Reading

வான் பாதுகாப்பு சிஸ்டத்தால் ஒன்னும் செய்ய முடியாது: புதின்

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் […]

Continue Reading

மோடிக்கு பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

ஜார்ஜ் டவுன்:22 பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி […]

Continue Reading

நக்கலடிக்கும் வகையில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்: பதிலடி கொடுத்த பும்ரா

பெர்த்:22 இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார். இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டகளும் ஒன்றாக இணைந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் […]

Continue Reading