மஹரகம வாகன விபத்து: ஒருவர் பலி!

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிலியந்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுபுன் சுலோகனா அகலங்க் எனவும் இவர் ஜனாதிபதி செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர புதிய வைத்தியசாலையிலிருந்து பமுன்வ நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, ஜீப் வாகன சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு கார்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் […]

Continue Reading

மொனராகலையில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  உயிரிழந்த இளைஞன் பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு காரணமாக இந்த பெண் இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பின்னர் முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக இருவரும் பொலிஸ் […]

Continue Reading

மொரட்டுவையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கொழும்பு , மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பொலிாருக்குக்  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 07 கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது […]

Continue Reading

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “தோரா” கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “தோரா” என்பவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பயாகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.  சந்தேக நபரிடமிருந்து 201 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் […]

Continue Reading

முல்லைத்தீவில் தீ விபத்து: முதியவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார். உயிரிழந்த முதியவர் தனது மகனின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில், கடும் மழையினால் ஏற்பட்ட குளிரை எதிர்கொள்ளும் வகையில் வெப்பமூட்டுவதற்காக வீட்டுக்குள் தீ பற்ற வைத்துள்ளார்.  இதன்போது தீ பரவியதால் இந்த […]

Continue Reading

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாசேனகம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வயோதிப  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ  பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மஹாசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிப  பெண் ஆவார்.  இந்த வயோதிப  பெண் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: இளைஞன் பலி

மஹரகம – பமுனுவ வீதியில் பமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதி பின்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் […]

Continue Reading

பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

பதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர் ஹாலிஎல, திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபர் ஆவார்.  உயிரிழந்த வயோதிபர்  தனது பயிர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலை சுற்றிப் பொருத்தியிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

தம்புள்ளை நகரத்தில் வயோதிபர் சடலமாக மீட்பு

மாத்தளை, தம்புள்ளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

லஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது!

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் […]

Continue Reading

கல்குடா பொலிஸ் பிரிவில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்

கல்குடா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை (29) இரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இவ் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகள், ஜன்னல் பகுதிகளை உடைத்து பெறுமதிவாய்ந்த வீட்டு உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளனர். திருடர்களை பிடிப்பதற்காக மட்டக்களப்பு குற்ற தடயவியல் பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோப்ப சக்தி நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர். திருடர்களிடமிருந்து தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு பிரதேச […]

Continue Reading

நாரஹேன்பிட்டி கொலைச் சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை! 

கொழும்பு – நாரஹேன்பிட்டியில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2016இல் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, மற்றுமொருவர் காயமடைந்தார்.  இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும், நீண்ட கால விசாரணைகளின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் இந்த மரண தண்டனையை […]

Continue Reading