காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

இன்று பிற்பகல் 2 மணி முதல் காலி வீதி – தெல்வத்தை சந்தியில் இருந்து சீனிகம வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்வத்த – ரத்பாத் ரஜமஹா விகாரையின் மிஹிந்து பெரஹெர வீதி உலா காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்தை மற்றும் சீனிகம வரையான பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading

பேராதனை பல்கலைக்கழகம் பொதுமக்களுக்காக திறப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை முதாலம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வரலாற்றில் ஒரு பல்கலைக்கழகம் பொதுமக்களின் சார்பில் திறந்த நாள் தினத்தை அறிவித்தது இதுவே முதல் முறை. பல்கலைக்கழக வளாகம் மற்றும் ஆய்வு நடைமுறைகள், சுற்றுச்சூழல் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் ஜூலை 1 ஆம் திகதி காலை 9 மணி முதல் […]

Continue Reading

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி பெற நடவடிக்கை?

கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கஞ்சா வளர்ப்பு திட்ட அறிக்கையை சமர்ப்பித்த உள்ளூர் முதலீட்டாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

முல்லேரியா சிறுவன் மரணம்: கைதானவருக்கு விளக்கமறியல்

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று(09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.

Continue Reading

அறுகம்பே கடலில் மூழ்கிய மூவர் மீட்பு

அறுகம்பே உல்ல கடற்கரையில் நீராட சென்ற மூவர் காணாமல் போன நிலையில் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த மூவரை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 40 வயது உடைய பெண் ஒருவரும் 11 வயது சிறுவனும் 17வயதுடைய இளைஞனும் இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

ஓடர்களை வழங்காததால் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 95 ஒக்டேன் பெற்றோல் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டமை தொடர்பில் பல ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர் சங்கம் இன்று மறுத்துள்ளது.நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது ஒக்டேன் 95 பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இந்த மாதத்திற்கான ஓடர்களை உரிய நேரத்தில் வழங்காததால் இந்த எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இருப்பினும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உடனடியாக […]

Continue Reading

350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நீர்ப்பம்பிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை இடம்பெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இணை செயலாளர் பிரசாந்தன், மாகாண பிரதித் திட்டப்பணிப்பாளர் கே.கருணாகரன் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் […]

Continue Reading

யாழில் 33 வருடங்களின் பின் மீள கையளிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் கோவில் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் கோவிலும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

Continue Reading

பொலிஸ் ஜீப் மீது தாக்குதல்: 3 பேர் கைது!

டயகம பகுதியில், காவல்துறை ஜீப் வண்டி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில், 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் திகதி, சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில், அந்தப் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 5 பேரை, காவல்துறையினர் அழைத்துச்சென்றபோது, குறித்த சந்தேகநபர்கள், ஜீப் வண்டி மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியிருந்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கும் நோக்கில், அவர்கள் தாக்குதல் நடத்தியிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் […]

Continue Reading

அமெரிக்காவாழ் இலங்கையர்களை சந்தித்தார் தூதுவர் ஜலி சங்

அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது.வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங்,“இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான 75 […]

Continue Reading

சுவிட்ஸர்லாந்து தூதரக, பாதுகாப்பு ஆலோசகர் கமல் குணரத்னவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின், பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில், நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது, இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், இலங்கை இராணுவத்திற்கான பயிற்சி வாய்ப்புகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டிற்குள், சட்டவிரோத போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்கு, இலங்கையின் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்புக்கள், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்பு செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பேச்சு

சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தவிர இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்நாட்டு படைகளுக்கு வழங்கக்கூடிய பயிற்சி வாய்ப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத போதைப்பொருள் நாட்டிற்குள் செல்வதைத் தடுப்பதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்கள் […]

Continue Reading