இங்கிரியவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் , சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் எதுரகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 33 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் , மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு […]

Continue Reading

தலைமன்னாரில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கேசாலே, சிரிதோப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24, 28, 29 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 06 கிலோ 120 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கொக்கரெல்லையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

குருணாகல், கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ பிரதேசத்தில், சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருநாகல் முகாமின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் , இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 மற்றும் 58 வயதுடையவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் இருந்து , 400 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை , கைதுசெய்யப்பட்ட […]

Continue Reading

யாழில் முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளது பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது சம்பவத்தில் கிராம அலுவலருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள்.  மேலும் வேறு சிலரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் […]

Continue Reading

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதத்தில் மறை 0.8 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மறை 2.1 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உணவுப் பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 […]

Continue Reading

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், […]

Continue Reading

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப் பகுதியின் வெலி ஆர பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோனகங்கார பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு விடுத்த அறிவிப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று (29) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ. எச். எம். டி. […]

Continue Reading

பொரளையில் கொக்கெய்னுடன் ஒருவர் கைது

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து , 5 கிராம் 255 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Continue Reading

முந்தலில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – புத்தளம் வீதியின் நவதன்குளம் பகுதியில் , கேரள கஞ்சா மற்றும் காருடன் இருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 38, 42 வயதுடைய மங்களஎலிய மற்றும் மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிலோ 83 கிராம் கேரள கஞ்சா மற்றும் […]

Continue Reading

எதிமலையில் கஞ்சா செடிகள், உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

வத்தேகம, எல்லனகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொவிபல மற்றும் விலஒய பிரதேசத்தைச் சேர்ந்த 47, 68 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களிடமிருந்து 301 கஞ்சா செடிகள் மற்றும் 2 உள்நாட்டுத் துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Continue Reading

வெள்ள நிலவரம்; முல்லைத்தீவில் அவசர கூட்டம்!

முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தப் பாதிப்புக்கள் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியூதீன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன், செ.திலகநாதன், […]

Continue Reading