சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!
நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கரவிட்ட ஆற்றிற்கு அருகில் உள்ள நீரியெல்ல பாலத்திற்கு அருகிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபராவார். கடந்த 14 ஆம் திகதி அன்று உயிரிழந்தவரது வீட்டிற்குச் சென்ற அவரது நண்பரொருவர் அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Continue Reading