சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு!

நிவித்திகல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கரவிட்ட ஆற்றிற்கு அருகில் உள்ள நீரியெல்ல பாலத்திற்கு அருகிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நபராவார். கடந்த 14 ஆம் திகதி அன்று உயிரிழந்தவரது வீட்டிற்குச் சென்ற அவரது நண்பரொருவர் அவரை வெளியே அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரது சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச […]

Continue Reading

வவுனியா நகரில் குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை, மோட்டார் சைக்கிள் கொள்ளை

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் இன்றையதினம் […]

Continue Reading

மஹகலுகொல்லவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

மஹகலுகொல்ல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹகலுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நாமளுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபராவார். இவர் பராமரித்து வரும் தோட்டத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் தனது தோட்டத்திற்குச் சென்றிருந்த போதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் சியபலாந்துவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மஹகலுகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

வவுனியாவில் திருமணம் செய்து ஒரு மாதத்தில் இளம் குடும்பஸ்தர் மாயம்

வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் தம்பதிகளில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில் குறித்த இளம் குடும்பத்தினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்த நிலையில், கடந்த 12 ஆம் திகதி மனைவியை அவரது பணித்தளத்தில் இறக்கிவிட்டு தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை […]

Continue Reading

வெளிநாட்டவரை அச்சுறுத்திய கொத்து முதலாளிக்கு பிணை

கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கெசல்வத்தை பொலிஸார் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். அளுத்கடை பகுதியில் உள்ள வீதி உணவகம் ஒன்றில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரை […]

Continue Reading

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டு

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை, பணம், இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா இலங்கை அரச போக்குவரத்து சபை அருகில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியார் விடுதியொன்றிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் விடுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளை குறித்த விடுதியை உடைத்து […]

Continue Reading

ஈஷி கேஷ் மூலம் போதைப்பொருள் விநியோகம்: பெண் கைது!

சிலாபத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு ஈஷி கேஷ் மற்றும் வேறு பல முறைகளைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏ.ரி.எம் அட்டைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். முந்தல அகுணவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வயம்ப குமாரி […]

Continue Reading

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் காயம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயமடைந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட காருடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் […]

Continue Reading

லொறியுடன் பஸ் மோதி விபத்து; 10 பேர் காயம்!

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் இ.போ.ச பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பஸ் நடத்துனர் உட்பட 10 பேர் காயமடைந்து பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான லொறி பொல்பிதிகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் குருணாகல் நோக்கி வேகமாகப் பயணித்த இ.போ.ச பஸ் லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த பஸ் நடத்துனர் மற்றும் நான்கு பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு […]

Continue Reading

குடும்ப தகராறு – மனைவியை கொன்ற கணவன்

கந்தேநுவர, ஹுனுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக கணவரே மனைவியை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading

புத்தாண்டு பாடலை பாடி, சமூக ஊடகத்தில் பதிவேற்றிய நபர் கைது!

சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் வகையில் பாடிய மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா். வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரோஹன பெத்தகே பாடிய சூர்ய மங்கள்ய புத்தாண்டு பாடலை கேலி, கிண்டல் செய்யும் விதமாக பாடி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading