சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் 344 குடும்பங்கள், 1,297 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணி வரையான காலப்பகுதியில் 344 குடும்பங்களை சேர்ந்த 1,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். மேலும், 204 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் அங்கு வசித்துவரும் 117 குடும்பங்களைச் சேர்ந்த 462 பேர் ஒன்பது தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய […]

Continue Reading

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குருமுல்ல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், அடபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் ஆவார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, இறந்தவர் வேறொருவரின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து மிளகு பறிக்கச் சென்ற போது, காணியைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ,சட்டவிரோதமான […]

Continue Reading

கோடரியால் வெட்டி மனைவி கொலை; கணவன் தப்பியோட்டம்!

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்ல கதிர்காமம் ரஜ மாவத்தை பிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. செல்ல கதிர்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாகவும், கொலையின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை […]

Continue Reading

ஹோமாகம துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஹோமாகம வைத்தியசாலை வீதிப் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை முயற்சி, பலத்த காயம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு மற்றும் […]

Continue Reading

வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான குறித்த நபர் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் 4 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் இன்று (29) திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட […]

Continue Reading

மலையக ரயில் சேவை பாதிப்பு

மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று (28) கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இயங்கும் இரவு தபால் ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது

Continue Reading

திருகோணமலை மாவட்டத்தில் 3,372 குடும்பங்கள் பாதிப்பு; ஒருவர் பலி!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வியாழக்கிழமை (28) வரை 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த மாவட்டத்தில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 254 குடும்பங்கள் தங்க […]

Continue Reading

உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு நகரில் உயர்தர பரீட்சை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்புக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரி உயர்தர பரீட்சை தொடர்பான பிரதான நிலையமாக செயற்பட்டுவரும் நிலையில் அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த 57வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த பொலிஸ் அதிகாரி பாடசாலையில் கடமையில் இருந்துள்ளதாகவும், இதன்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் […]

Continue Reading

பொத்துவிலில் நபர் ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலை பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலை பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் இருந்து எருமை மாடுகளை கரைக்கு கொண்டுவரும் போது குறித்த நபரை முதலை பிடித்து இழுத்து செல்லப்பட்டதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே இந்த சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார். காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிசார் மற்றும் […]

Continue Reading

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி!

முந்தலம 412 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று 28ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்டேன்லி திலகரத்ன (வயது: 55) மற்றும் சந்திரிகா மல்காந்தி (வயது: 52) என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் தங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் வர்த்தக இடத்தை பராமரித்து வந்ததாகவும் வர்த்தக நிலையத்துக்கு மின்சாரம் வழங்கியதாக கூறப்படும் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்ற கணவன் மின்சாரம் தாக்கி […]

Continue Reading

பயங்கரவாத இயக்கத்தையும் அதன் தலைவரையும் போற்றுவது முன்நோக்கிப் பயணிக்க உதவாது – அலி சப்ரி

இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை […]

Continue Reading