பாதுகாப்பு செயலரின் பங்குபற்றலுடன் யாழில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல்!

யாழில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் (28) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களிடம் கேட்டறிந்தனர் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு உருவாகுவதற்கான […]

Continue Reading

நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம்!!

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

சீரற்ற வானிலை: அம்பாறையில் அதிக உயிரிழப்பு பதிவு!

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற வானிலையால் நாட்டின் 24 மாவட்டங்களிலும் உள்ள 227 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது, ​​120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் 345 பாதுகாப்பான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 11,663 குடும்பங்களைச் சேர்ந்த 36,330 பேர் அங்கு […]

Continue Reading

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மனைவி ஆவார்.  குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  உயிரிழந்த மனைவி கடந்த திங்கட்கிழமை (25) மீகஹகிவுல நகரத்தில் தனது அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியில் இருந்த கணவன் […]

Continue Reading

துபாயில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் கைது

துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான பெண் துபாயில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அம்பாறை, பதுளை மற்றும் பிபில உள்ள […]

Continue Reading

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு!

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ – கனேவல்பொல வீதியில் கோமரன்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.  இந்த விபத்து நேற்று புதன்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது கலென்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  உயிரிழந்தவர் கலென்பிந்துனுவெவ, கோமரன்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த […]

Continue Reading

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் முதல் வழக்கு: சந்தேக நபருக்கு 6 மாத சிறை

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதற்காக தொழிலதிபர் ஒருவருக்கு 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரைப் பற்றிய தவறான தகவல்களை உள்ளடக்கிய ஒலிப்பதிவுகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக தளங்களில் பரப்பியதாக வர்த்தகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே சந்தேகநபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத […]

Continue Reading

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி உரிய உதவிகளை வழங்கவில்லை – கீதநாத்

இலங்கையின் வடமாகாணத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அந்த மாகாணத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதியளவு உதவிகளை வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் யாழ்மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி வழங்க தவறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள அவர் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சுமார் 250,000க்கும் அதிகமான மக்கள் கடும் வெள்ளத்தினால் பாதிப்புகளை […]

Continue Reading

வவுனியாவில் குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளது. மகாகச்சகொடி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்ற போது கால் தவறி குளத்திற்குள் இளைஞன் விழுந்துள்ளார். இதனையடுத்து, ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் […]

Continue Reading

மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading

14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 14 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு தலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் மலேசியாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு […]

Continue Reading

மாவனல்லையில் மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவன்

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி வழங்கிய முறைப்பாட்டை விசாரிப்பதற்கு பொலிஸ் நிலையம் சென்ற கணவன் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, 21 வயதுடைய மனைவி, மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய கணவன் தொடர்பில் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகக் கணவனும் மனைவியும் கடந்த 26 ஆம் […]

Continue Reading