மீன்பிடிக்கச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

தந்தையும் மகனும் யான் ஓயா ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாறக் (56 வயது) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. புடவைகட்டு – சாகரபுர பகுதியில் குறித்த சடலம் இன்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் நேற்றைய தினம் (27) யான் ஓயா ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது தந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய […]

Continue Reading

மஹரகமவில் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு

மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 920 […]

Continue Reading

ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளை!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்று (27) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். […]

Continue Reading

கம்பளை – தொலஸ்பாகை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு!

கம்பளை நகரிலிருந்து தொலஸ்பாகை நகருக்குச் செல்லும் பிரதான வீதியில், கடல்பொக்கு எனும் பிரதேசத்தில் நேற்றிரவு (27) பாரிய வெடிப்பு ஏற்பட்டுக் குறித்த வீதி தாழிறங்கியுள்ளது. இதனால் குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து இன்று (28) காலை முதல் முற்றாகப் பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் தொழிலுக்குச் செல்லும் மக்கள் வாகனங்களை விட்டு இறங்கி நடந்து சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை குறித்த பிரதான வீதியூடான போக்குவரத்து தற்போது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் […]

Continue Reading

சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

புத்தளம், மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்போவ பிரதேசத்தில் தென்னை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை (27) இரவு சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், தம்போவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் நீண்ட நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராததால் அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான […]

Continue Reading

கிட்டங்கி வீதி – மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியது

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி மற்றும் மாவடிப்பள்ளி வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர்பாய ஆரம்பித்துள்ளதுடன் இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தையும் காரைதீவு பிரதேச […]

Continue Reading

நீர் நிரம்பிய வடிகாணில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

கொஸ்வத்த, மாவத்தகம கைத்தொழில் வலயத்தில் நீர் நிரம்பிய வடிகாணில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மடுமுல்ல, உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை திடீர் மரண பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கலகெதர பிரதேசத்தில் இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம்!

கண்டி – கலகெதர பிரதேசத்தில் மூன்று மாடிக் கட்டடம் ஒன்று (27) இடிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாகக் குறித்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

முச்சக்கரவண்டி – கெப் வாகனம் மோதி விபத்து: நால்வர் காயம்

குருணாகல் – கெப்பெட்டிகல வீதியில் மீகஸ்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  முச்சக்கரவண்டி ஒன்று வீதியின் வலது பக்கமாக திரும்ப முயன்ற போது பின்புறத்தில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்  தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தல்கஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.  சந்தேக நபரிடமிருந்து 59 லீற்றர் 250 மில்லி லீற்றர் (79 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதனையடுத்து, கைது செய்யப்பட்ட […]

Continue Reading

தம்பலகாமம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே இவ் வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வழி ஊடாக பொது மக்களை பயணிக்குமாறு தம்பலகாமம் பிரதேச செயலகம் பொது மக்களை கேட்டுள்ளது. கன மழை காரணமாக தம்பலகாமம் பகுதியில் உள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. முள்ளியடி பகுதியில் விவசாய நிலங்கள் […]

Continue Reading

மன்னாரில் சீரற்ற வானிலையால் 50 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக வடமாகாணமும் பாதிக்கப்பட்டுள்ளதோடு,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27) காலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாடு செய்த குறித்த அவசர கலந்துரையாடல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையில் இடம்பெற்றது. இதன் போது வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகம்,ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் […]

Continue Reading