பூஸா சிறைச்சாலை கைதியின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகள் மீட்பு!

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கைதியிடமிருந்து கைத்தொலைபேசிகள் , சார்ஜர்கள் , பெட்டரிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

Continue Reading

தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி விபத்துக்குள்ளான கார்

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், திங்கட்கிழமை (25) காலை 08 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி கார் அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளது. அப்போது நாயொன்று வீதியை கடக்க முட்பட்டுள்ளத, நாயை காப்பாற்றும் முயற்சியால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேயிலை செடிகளுக்குள் சென்றுவிட்டது. விபத்தின் […]

Continue Reading

பெண்ணை பலாத்காரமாக கடத்திச் சென்ற பொலிஸ் உட்பட இருவர் கைது!

குருவிட்ட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் காணப்பட்ட பெண் ஒருவரை பலாத்காரமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்றபோது சந்தேக நபருடன் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் சிரிபாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்களாவர். பிரதான சந்தேக நபர் இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை […]

Continue Reading

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலும் மூவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞனை கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் இபிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைதுசெய்திருந்தனர். குறித்த 6 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவரை அடையாள அணிவகுப்பின் போது கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர் […]

Continue Reading

சிகரெட்டுகளுடன் பெண் கைது!

பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 118 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சட்டவிரோத சிகரெடுகளும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Continue Reading

யாழில் ஊடகவியலாளர் என கூறி 43 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறி, அவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ள ஊடகவியலாளர்களுடன் ஊடகவியலாளராக உங்களையும் அழைத்து சென்று கனடாவில் இறக்கிவிடுவதாக யாழ்ப்பாண இளைஞன் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்காக சிலருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், ஊடக நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஊடகவியலாளர் என அடையாள […]

Continue Reading

தெங்கு பயிர்ச் செய்கை சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது!

ஊழியர் நம்பிக்கை நிதிய பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் முன்னாள் பொது முகாமையாளர் சனிக்கிழமை (23) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். தெல்கொட உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த (64) வயதுடைய கே.டி.லயனல் தர்மசிறி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் […]

Continue Reading

மஹவெலயில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

வீடு ஒன்றுன்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை தடியால் தாக்கி கொலை செய்த சம்பவம் மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் […]

Continue Reading

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த மோசடி டொக்டர் கைது!

சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. குறித்த நபர் கொழும்பு 07, விஜேராம மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் அவர் வைத்தியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேக நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு […]

Continue Reading

தனியார் கல்வி நிலையத்தில் மோதல் – 9 மாணவர்கள் படுகாயம்

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (25) காலை கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் பல்வேறு கேள்விகளை துண்டுப்பிரசுரம் ஊடாக வெளியிட்டு நடைபெற்று வருகின்றது. மேலும் குறித்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். குறித்த […]

Continue Reading

ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பலி

யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அராலி மத்தியைச் சேர்ந்த 5 வயதுடைய கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். ஆனாலும், அதைச் சிறுவனுக்கு வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் நோயால் துடித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் இறப்புவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் […]

Continue Reading