தலைமைப் பொறுப்பை வழங்கினால் ஐ.தே.கவுடன் இணையத் தயார் – ஹர்ஷன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டில் இல்லை. அவர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம். மேலும், அனைத்து வலதுசாரி அரசியல்வாதிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் […]

Continue Reading

23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் டிசம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுட்ட 23 இந்திய மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர், மறுநாள் (11) கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் ஒப்படைத்தனர். அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது இன்றுவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் 23 மீனவர்களையும் […]

Continue Reading

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பில் மூழ்கிய தந்தை, மகள் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (24) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களில் 5 பேர் உயிர் தப்பியதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் இன்று (25) பிற்பகல் நீர்கொழும்பு முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ரணில் பெர்னாண்டோ என்ற 50 வயதுடைய இரண்டு […]

Continue Reading

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பி செல்ல முயன்ற இந்தியப் பெண் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரான 24 வயதுடைய இந்திய பெண் கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் 03.30 மணியளவில் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தியப் பெண்ணின் […]

Continue Reading

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் 1679 பேர் பாதிப்பு!

 கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 493 குடும்பங்களைச் சேர்ந்த 1679 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரதிபுரம், தொண்டமான்நகர், மாவடியம்மன், கனகபுரம், கண்ணகிபுரம், இராமநாதபுரம், திருநகர், கனகாம்பிகைக்குளம், திருவையாறு, ஜெயந்திநகர் பகுதிகளிலேயே இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 […]

Continue Reading

கொடவத்தையில் இளைஞன் அடித்துக் கொலை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  ஒருகொடவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தகராறின்போது காயமடைந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

Continue Reading

புலமைப்பரிசில் பரீட்சை: அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் சில வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த 3 குழுக்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு எடுக்கப்படும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

சீரற்ற காலநிலை: பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பானது, இன்று மாலை 4மணி முதல் நாளை மாலை 4 .00 மணி வரை அமுலில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதன்படி முதலாம் நிலை மஞ்சள் நிலை எச்சரிக்கையானது பதுளை மாவட்டத்தில்.ஹல்துமுல்ல, எல்ல மற்றும் பசறை மாவட்டத்திற்கும் காலி மாவட்டத்தில்.பத்தேகம, நாகொட மற்றும் எல்பிட்டிய மாவட்டத்திற்கும் விடுக்கப்பட்டுள்ளது அத்துடன் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, கேகாலை மற்றும் யட்டியந்தோட்டைக்கும் மாத்தறை மாவட்டத்தில். பிடபெத்தரா மாவட்டத்திற்கும் […]

Continue Reading

வீடொன்றிலிருந்து வயோதிப பெண் சடலமாக மீட்பு!

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குமுதினி என்ற 60 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் பிள்ளைகள் மூவரும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த வயோதிப பெண் வீட்டிலிருந்து வெளியே வராததால் […]

Continue Reading

லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஐவர் படுகாயம்

பதுளை – மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று (25) இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மிகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு லொறிகளும் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன், கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

சுஜீவவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் V8 சொகுசு காரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (25) உத்தரவிட்டுள்ளார். 100 மில்லியன் ரூபா பிணைப்பத்திரத்தில் அதனை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Continue Reading

போலி நாணயத்தாளுடன் இளைஞர்கள் கைது

அம்பாறை, உஹன பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உஹன பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை உஹன திஸ்ஸபுர பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் இருவர் ஆவர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 23 ஆம் திகதி அன்று விற்பனை நிலையம் ஒன்றில் போலி நாணயத்தாளை பயன்படுத்தி வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கொள்வனவு செய்ய முயன்றுள்ளனர். இதன்போது, போலி நாணயத்தாளை சோதனை […]

Continue Reading