போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம்

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். இந்த நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் மட்டக்களப்பு, […]

Continue Reading

நிறுத்தப்படும் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்!

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை […]

Continue Reading

முட்டைக்கான நுகர்வோரின் தேவை குறைவு

நுகர்வோரின் தேவை குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். உயர்ந்து வந்த முட்டை விலை தற்போது 50 முதல் 52 ரூபாய் வரை குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

வெளிநாட்டு பாஸ்மதி அரிசி மாதிரிகளில் தரப் பிரச்சினை

கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலப் பகுதியில், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக பரிசோதிக்கப்பட்ட 365 பாஸ்மதி அரிசி மாதிரிகளில் 162 மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அமைவாக இல்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த 365 மாதிரிகளில் 203 மாதிரிகள் மட்டுமே இறக்குமதிக்கு தரமானதாக இருந்தது தெரிய வந்துள்ளது. அப்போது, ​​இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கைக்கு […]

Continue Reading

13 வயது மாணவியை துஷ்பிரயோகப்படுத்திய 19 வயதான இராணுவ சிப்பாய் கைது

புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இராணுவ சிப்பாய் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் 19 வயதுடைய இராணுவ சிப்பாயாவார். இவர் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பிலிருந்துள்ளனர். சந்திக்க வருமாறு மாணவியை அழைத்த குறித்து இராணுவ சிப்பாய் ஆள் நடமாட்டமில்லாத தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். […]

Continue Reading

மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் கைது

மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Continue Reading

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை சந்தேக நபர் கைது

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை குறித்த கொலை சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய சி.எம். இப்ராஹிம் என்பவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டிருந்தது. சந்தேக […]

Continue Reading

வகுப்பு வட்டங்கள் கட்டாயம் – கல்வி அமைச்சர்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முதல் பதினைந்து நாட்களுக்குள் பாடசாலை அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டுமென அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். பெற்றோருக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அவர் கூறுகிறார். “… ஆண்டின் தொடக்கத்தில், அந்த குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு வகுப்பு மற்றும் ஒரு வகுப்பிற்கு தங்கள் பெற்றோரிடம் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் வகுப்பு ஆசிரியர் சில விளக்கங்களை அளிப்பார். அவர்கள் ஆண்டின் திட்டம், ஒழுக்கம் பற்றி […]

Continue Reading

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்கவை முன்வைக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உடனடித் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்திப் பயணத்தில் கொண்டு செல்கின்றன. மேலும் நாடு இலகுவான பயணம் அல்ல. இது ஒரு இருண்ட பயணம். எனினும் ஒருவித முன்னோக்கு பார்வையுடன் கூடிய […]

Continue Reading

பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்து வந்த 11 பேர் கைது

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருபவர்களிடம் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்து வந்த 11 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வருபவர்களிடம் அழுத்தங்களை பிரயோகித்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பணம் வசூலிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான […]

Continue Reading

அஞ்சல் சேவை மூலம் போதைப் பொருள் விற்பனை – பல்கலைக்கழக மாணவர் கைது!

அஞ்சல் சேவை மூலம் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசேட அதிரடி படையினரால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continue Reading

பிறந்து நான்கு நாட்களேயான குழந்தை மரணம் – யாழ்ப்பாணத்தில் துயரம்!

பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே திங்கட்கிழமை (18) இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயும் சேயும் கடந்த 16ஆம் திகதி வீடு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் குழந்தையின் உடல் திடீரென குளிர்ந்ததுடன் உடலில் சிவப்பு […]

Continue Reading