13 ஆக அதிகரித்துள்ள சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அந்த நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதன்படி 100,032 குடும்பங்களை சேர்ந்த 441, 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 38,616 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Continue Reading