அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இரு தினங்களில் நாடு திரும்பவுள்ள சாந்தன்!

யாழ்ப்பாணம், பெப். 2: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான முயற்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு […]

Continue Reading

கால்நடை வைத்தியர்கள் இன்மையால் இன்னல்களை எதிர்நோக்கும் மலையப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள்!

சிறப்புக் கட்டுரை மஸ்கெலியா மற்றும் பொகவந்தாலவை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் இடம் மாற்றம் பெற்றதன் பின்னர் கடந்த பல மாதங்களாக மஸ்கெலியா மற்றும் பொகவந்தாவை கால்நடை வைத்திய அதிகாரி இடங்கள் காலியாகவே காணப்படுகின்றது. மலையகத்தில் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படும் பிரதேசங்களில் பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா பிரதேசங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இப் பிரதேசங்களின் கால்நடை தொடர்பான விடயங்களை ஹட்டன் கால்நடை வைத்திய அதிகாரியே தற்பொழுது கவனித்து வருகின்றார். அவசர தேவைகளின் போது ஹட்டன் கால்நடை வைத்திய […]

Continue Reading

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கொழும்பு,மே 07 நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின் படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேசத்திற்கும் காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய மற்றும் யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, ரம்புக்கன, தெரணியகல, மாவனெல்ல, கேகாலை மற்றும் கலிகமுவ ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம […]

Continue Reading

மீண்டும் முகக்கவசம் அணியவும் – நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய் நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, – முகக்கவசம் அணியவும் – நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் – நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருக்கவும் – அறிகுறிகள் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும் – கைகளை சுத்தமாக கழுவவும் – கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும் – […]

Continue Reading

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா

ரஷ்யா,ஒக் 02 யுக்ரேன்: ரஷ்யாவை முடக்கும் அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் – விளாடிமிர் புதின் என்ன செய்வார்? யுக்ரேன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் அதிபர் புதின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. போருக்கு செலவழிக்கும் ரஷ்யாவின் திறனைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றன.யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோன் ஆகிய பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளதாக […]

Continue Reading

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாடு

யாழ்ப்பாணம், செப். 25: யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான பிள்ளைகளை அவர்களின் தாய்மார்களே பொலிஸ்நிலையத்தில் ஓப்படைக்கும் அவலம் நடக்கிறது. பாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்றுக் கூட பண்டந்தரிப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப் பொருள் பயன்பாட்டால் உயிரிழந்துள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 320 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு […]

Continue Reading

ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை

இந்தியா,செப் 25 இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும் பெண்ணாக மைதானத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் […]

Continue Reading

இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப தயக்கம்

கொழும்பு,செப் 19 இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் இலங்கை அழைத்து வர வேண்டும் என […]

Continue Reading

பேஸ்புக் காதலிக்காக விகாராதிபதியை கொன்ற இளம் பிக்கு: விகாராதிபதி கொலையில் நடந்தது என்ன?

கொழும்பு, செப். 17: சீதுவை வெத்தேவ ஸ்ரீ நந்தராமய விகாராதிபதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் பிக்குவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சீதுவை வெத்தேவ ஸ்ரீ நந்தராமய விகாராதிபதி நெத கமுவே மகாநாம தேரர் கொலை தொடர்பாக, அந்த விகாரையில் தங்கியிருந்த 19 வயதுடைய சிவரதாரிய ஏகல சுமணசிறி தேரர், துபாய்க்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், […]

Continue Reading

டக்ளஸின் அறைகூவலுக்கு மாற்றுக் கட்சிகளின் இடைநிலை தலைவர்கள் ஆதரவு

யாழ்ப்பாணம், ஓக. 30: வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் தரப்புகளை ஒன்றிணைத்து இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றுக் கட்சியினர் இடையே குறிப்பாக மாற்றுக் கட்சியின் இடைநிலை தலைவர்கள், உறுப்பினர்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கிய இடை […]

Continue Reading

குலையப்போகும் கூட்டமைப்பு

யாழ்ப்பாணம்,ஓக 14: 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு இரண்டு தசாப்பதங்களுக்குள் 50 சதவீதமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ்பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய இரு கட்சிகள் வெளியேறியும் உள்ளன. கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் அரசியலுக்குள் வலிந்து இழுத்துவந்த விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோர் வெளியேறி தனிக்கட்சியை உருவாக்கியும் உள்ளார்கள். இந்த நிகழ்வுகளுக்கு “கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு. […]

Continue Reading

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்: ரணிலின் விடுபாட்டுரிமைக்கு மைத்திரி கடும் ஆட்சேபனை

கொழும்பு, ஜுலை 26 போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ள விடுபாட்டுரிமையை பயன்படுத்தி பிரதிவாதி பட்டியலிலிருந்து நீக்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளனர். இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  பிரதம […]

Continue Reading