ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள இலவச போக்குவரத்து சேவை
நாளை மற்றும் நாளை மறுதினம் ஓய்வூதிய கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளச் செல்பவர்களுக்காக இலவச போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெருவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துபவர்கள் தமது தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய கொடுப்பனவு அட்டை அல்லது திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் என்பவற்றைக் காண்பித்துப் பயணிக்க முடியும் எனப் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue Reading