கோவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய அதிக சக்திவாய்ந்த மருந்து இறக்குமதி

கோவிட் நோயாளிகளுக்கு ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சின் மருந்து நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கோவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய இரண்டு மருந்துகளின் கலவையான ரீகன் கோவ் வழங்குவதற்கு உலகின் பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மருந்தைக் கொடுப்பது உயிருக்கு ஆபத்தான நோயாளிகளின் ஆபத்தை 81 சதவீதம் குறைக்கிறது என்று சோதனைகள் காட்டுகின்றன. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மருந்து பொருத்தமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா […]

Continue Reading

பங்களாதேஷ் உட்பட சில நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு $1200 மில்லியன் கடன் வாங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 787 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இன்று பெற்றுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கியுடன் கையொப்பமிடப்பட்ட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி இன்று 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்ஆர் ஆத்திகல்லே தெரிவித்தார். இதேவேளை, ஆகஸ்ட் 17 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்தின்படி இலங்கை 309 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் […]

Continue Reading

மட்டக்களப்பில் தினமும் 300 பேருக்கு மேற்பட்ட தொற்றாளர்கள்

மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு, சராசரியாக ஐந்துக்கு மேற்பட்ட மரணங்களும் சம்பவித்து வருகின்றன என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்துள் 257 கொவிட் 19 தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இருவர் மரணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் […]

Continue Reading

திருநெல்வேலியில் வர்த்தகத்தில் ஈடுபட்டோர் பொலிசாரால் விரட்டியடிப்பு!

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிசாரால் விரட்டியடிப்பு! நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரினால் விரட்டப்பட்டனர். அவ்விடத்தில் மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்தகோப்பாய் பொலீசார் […]

Continue Reading

யாழ் போதனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் […]

Continue Reading

சாவகச்சேரியில் 69 பேருக்கு கொரோனா

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 41 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 98 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 28 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்ட 28 பேரையும் அவர்களது உடல்நிலையைக் கணித்து […]

Continue Reading

யாழில் வீரியமடையும் கொரோனா தொற்று – தயவுசெய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில்74 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 301 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் மொத்தமாக375 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில், மேலும், மொத்தமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 12460 […]

Continue Reading

இலங்கையில் தற்போது பாரிய நிதி நெருக்கடி

நாடு நிதி ரீதியில் நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் நிதி ஓழுங்குவிதிகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டிய கடற்பாடு இருப்தாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது முடிவுறுத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ,இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி […]

Continue Reading