இளம்பெண் படுகொலை
இளம் தாயொருவரின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊவா பரணகம, திம்புலன பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், ஊவா பரணகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Continue Reading