கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சுதந்திர தினம் முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக நாளை (28) முதல் காலி முகத்துவாரம் மற்றும் கொழும்பில் உள்ள பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட போக்குவரத்து திட்டம் நாளை (28), நாளை மறுதினம்(29) மற்றும் பெப்ரவரி 1, 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.