ஏலத்திற்கு வரும் டயானாவின் கவுன்கள்!

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

நியூயார்க்,ஆக 31

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா அணிந்த 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுகின்றன.

அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானா உடுத்திய கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன. 1997-ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தமது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனை சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதையடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 கவுன்களில் டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக 4 லட்சம் டாலர் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப்பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.