தமிழரையும், சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே பேச்சு நாடகம்; ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, மார்ச் 26

சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இதனைக் கூறினார். தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்படவேண்டும்.

பேச்சை மேசையைக் கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது.

தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.