யாழ் கோப்பாயில் யுக்திய நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை பொலீஸ் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் “யுக்திய” நடவடிக்கை இன்று காலை முதல் கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குட்ட பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.  

கோப்பாய் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகெதர மற்றும் கோப்பாய் பொலீஸ் நிலையப் போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.ஜீ ஹேரத் ஆகியோரின் நேரடி நெறிப்படுத்தலில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் பேற்கொள்ளப்பட்டதுடன், வாகனங்களில் “யுக்திய” விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் பொலீசாரால் ஒட்டப்பட்டன.